Subscribe Us

சாரதி இருந்தும் பாதை மாறி சென்ற கண்டிக்கான ரயில்!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டி நோக்கி சனிக்கிழமை மாலை சென்ற ரயில் மருதானை புகையிரதம்  அதன் வழியை மாறிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிரயாணத்தை ஆரம்பித்த செங்கடகல மெனிக்கே ரயில் மீண்டும் மருதானை ரயில் நிலையத்திலிருந்து  மாலை 4.35 க்கு பிரயணத்தை ஆரம்பிக்கும் போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சிறிது தூரம் குறித்த  புகையிரத எஞ்சின் பாதை மாறிச்  சென்றதனை அவதானித்த  அதன் சாரதி பின்னர் அதனை சரியான  பாதைக்குக் கொண்டு வந்துள்ளார் .

சில மாதங்களுக்கு முன்னர் சாரதி  இல்லாமல் ரயில் எஞ்சின் ஒன்று மாளிகாவத்தையிலிருந்து ரத்மலானை வரைக்கும் சென்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments