Subscribe Us

header ads

ஜம்மியத்துல் உலமா சபையை தடை செய்ய வேண்டும் - ஞானசார தேரர்

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையை தடை செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த கருத்தை வெளியிட்டார்.

ஜமியத்துல் உலமா சபையை மாத்திரமின்றி ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையையும் முழுமையாக இலங்கையினுள் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி தொடக்கம் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது.

அதற்கு பதில் கருத்துக்களை வெளியிடும் நோக்கிலேயே பொதுபலசேனா இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்திருந்தது.

Post a Comment

0 Comments