Subscribe Us

header ads

ஐ.பி.எல். திகதி குறித்து இம்மாத இறுதியில் முடிவு

இம்­மாத இறு­தி­யி­லேயே 7 ஆவது இந்­தியன் பிரி­மியர் லீக் (ஐ.பி.எல்.) தொட­ருக்­கான போட்டி அட்­ட­வணை குறித்து இறுதி முடிவு எடுக்­கப்­படும் என ஐ.பி.எல். நிர்­வாகம் அறி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு 7 ஆவது ஐ.பி.எல். தொடர் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடை­பெ­ற­வுள்­ளது. எனினும் இத்­தொ­ட­ருக்­கான போட்டி அட்­ட­வணை இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

தொடர் நடை­பெ­ற­வுள்ள குறித்த காலப்­ப­கு­தியில் இந்­திய பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­தா­லேயே போட்­டிக்­கான திக­தியை முடிவு செய்­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. பாராளுமன்ற தேர்தல் கார­ண­மாக கடந்த 2009 ஆம் ஆண்டும் ஐ.பி.எல். போட்டி தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

தற்­போது அதே சூழ்நிலை உரு­வாகி உள்­ளது. இந்­தி­யாவில் பாதி போட்­டி­க­ளையும், தென்­னா­பி­­ரிக்­காவில் மீதி போட்­டி­க­ளையும் நடத்­த­லாமா? என்று ஆய்வு செய்­யப்­ப­டு­கிற அதே­வேளை இலங்­கை­யிலும் சில ஆட்­டங்­களை நடத்­து­வது பற்­றியும் ஆலோ­சனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லை­யி­லேயே ஐ.பி.எல். நிர்­வாக்­குழு இம்­மாத இறு­தியில் கூடுகின்றது. இதில் தொடருக்கான போட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments