Subscribe Us

header ads

மொரகொல்ல தோட்டத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் மோதல் :-இருவர் காயம், ஒருவர் கைது

ஆலி - எல மொர­கொல்ல தோட்­டத்தின் மத்­தியில் பல­வந்­த­மாக புத்தர் சிலை ஒன்­றினை வைப்­ப­தற்கு முற்­பட்ட வேளையில் ஏற்­பட்ட மோதலில் இருவர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மேலும் இருவர் தேடப்­பட்டு வரு­கின்­றனர்.
 
மேற்­படி தோட்ட மத்­தியில், கிரா­மிய இளை­ஞர்கள் சிலர் புத்தர் சிலை­யொன்­றினை வைக்க முற்­பட்­டனர். இத­னை­ய­றிந்த தோட்ட மக்கள் எதிர்ப்­பினை தெரி­வித்த வேளையில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையே மோதல் ஏற்­பட்­டுள்­ளது. இம்­மோ­தலில் மொர­கொல்ல தோட்­டத்தைச் சேர்ந்த இருவர் காய­ம­டைந்­துள்­ளனர்.
 
இது தொடர்­பாக பதுளைப் பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட புகா­ரை­ய­டுத்து, ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேலும் இருவர் தேடப்­பட்டு வரு­கின்­றனர்.
 
இத­னை­ய­டுத்து புத்தர் சிலை வைக்க முற்­பட்­டது மற்றும் தாக்­குதல் சம்­பவம் ஆகி­ய­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவற்­றினை ஆட்­சே­பித்து மொர­கொல்லை தோட்டத் தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments