Subscribe Us

header ads

கடலில் மூழ்கிய இளைஞர்களில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கல்

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளிக்கச் சென்று  நீரில் மூழ்கி காணாமற்போன மூன்று இளைஞர்களில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.  
 
மட்டக்களப்பைச் சேர்ந்த 19, 20 ,23 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை நண்பர்கள் 7 பேருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது மூன்று பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
 
கடலில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய நண்பர்கள் திரும்பி கரைக்கு வந்துள்ள நிலையில், குறித்த மூவரும் கடலில் மூழ்கியதாக ஏனைய நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.
 
கடலில் மூழ்கியவர்களை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

Post a Comment

0 Comments