Subscribe Us

header ads

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆபத்து காத்திருக்கின்றது ; விஜே­தாச ராஜ­பக்ஷ

இம்­முறை ஜெனிவா கூட்டத் தொட­ரின் ­போது இலங்­கைக்கு ஆபத்து காத்­தி­ருக்­கின்­றது. நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடைகள் கூட விதிக்­கப்­ப ­டலாம். ஆனால் இந்த நெருக்­கடி நேரத்தில் அர­சாங்கம் இதய சுத்­தி­யுடன் எம்­மிடம் கோரிக்கை விடுத்தால் நாட்­டுக்­காக அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தயா­ராக இருக்­கின்­றது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.
 
உள்­நாட்டில் அர­சியல் செய் ­வ­தைப்­போன்று அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் அர­சியல் செய்ய முடி­யாது. சர்­வ­தே­சத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு முழு­மை­யாக இரா­ஜ­தந்­திரம் அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
மாகாண சபை ஒன்­றுக்கு சர்­வ­தேச விசா­ரணை கோரி பிரே­ரணை நிறை­வேற்ற முடி­யாது. எனவே வட மாகாண சபையின் பிரே­ரணை நிறை­வேற்றம் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு முற்­றிலும் விரோ­த­மா­னது. இதனைக் காரணம் காட்டி மாகாண சபை கலைக்­கக்­கூ­டப்­ப­டலாம். ஆனால் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யாது என்றும் விஜே­தாச எம்.பி. குறிப்­பிட்டார்.
 
வடக்கை பொறுத்­த­வரை அர­சாங்கம் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வ­திலோ வீதியை செப்­ப­னி­டு­வ­திலோ மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய மாட்­டார்கள். அந்த மக்­க­ளுக்கு அபி­மானம் மற்றும் கெள­ரவம் தொடர்­பான பிரச்­சினை உள்­ளது. அதனை தீர்க்­க­வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது
பாரிய நெருக்­கடி
எமது நாடு இன்று சர்­வ­தேச ரீதியில் பாரிய நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளது. சர்­வ­தேச ரீதியில் அர­சாங்கம் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் அதன் கார­ண­மாக மக்­களும் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்­ளனர். 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாட்டில் ஐந்து ஜனா­தி­ப­திகள் யுத்தம் செய்­தனர். ஆனால் அக்­கா­லத்தில் வராத யுத்தக் குற்­றச்­சாட்டு தற்­போது வந்­துள்­ளது. காரணம் தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச மட்­டத்தில் உரிய முறையில் இரா­ஜ­தந்­திர செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளா­மையே இதற்கு கார­ண­மாகும்.
 
அதி­கார நாடு­களே உலகை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன
நான் 2007 ஆம் ஆண்டு இது தொடர்பில் அர­சாங்­கத்தை எச்­ச­ரித்தேன். ஆனால் நான் கூறி­யதை அர­சாங்கம் கேட்­க­வில்லை. காரணம் அர­சாங்­கத்தின் சர்­வ­தே­சத்­து­ட­னான அணு­கு­முறை போது­மா­ன­தாக இல்லை. உலகை ஒரு­சில அதி­கா­ர­மிக்க நாடு­களே கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன. அந்த யதார்த்­தத்தை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். ஆனால் எமது அர­சாங்கம் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா, இந்­தியா போன்ற நாடு­க­ளுடன் கோபித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.
 
2008 இல் தெரி­வுக்­கு­ழுவை கோரினேன்
வடக்கு கிழக்குப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு ஒன்றை நிய­மிக்­கு­மாறு கடந்த 2008 ஆம் ஆண்டு நான் யோசனை முன்­வைத்தேன். ஆனால் அன்று நான் கூறி­யதை அர­சாங்கம் கேட்­க­வில்லை. அன்று பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்தால் அதில் கட்­சிகள் அங்­கத்துவம் வகித்­தி­ருக்கும். ஆனால் அர­சாங்கம் 2011 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தது. எனினும் அதில் அர­சியல் கட்­சிகள் இணைந்­து­கொள்­ளாமல் உள்­ளன.
 
சதி இருந்­தது
2009 ஆண்டு முடிக்­கப்­பட்ட யுத்­தத்­துக்கு சர்­வ­தேச நாடுகள் ஆத­ரவு வழங்­கி­னாலும் இலங்­கையை சிக்­க­வைப்­ப­தற்­கான சதி முயற்சி ஒன்று காணப்­பட்­டது. அத­னால்தான் யுத்தம் முடிந்­ததும் ஐ.நா. செய­லாளர் இலங்கை வந்து வடக்­குக்கு சென்று நிலைமையை பார்த்­து­விட்டு இல்­ங­கை­யுடன் உடன்­ப­டிக்கை செய்தார்.
அந்த உடன்­ப­டிக்­கையில் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் உள்­ளக செயற்­பாடு ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று உடன்­பாடு காணப்­பட்­டது. அதன்­ப­டியே நல­லி­ணக்க ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அத்­துடன் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.
 
யுத்த வெற்றிக் களிப்பில் இருந்த அர­சாங்­கத்­துக்கு அந்த உடன்­ப­டிக்­கையின் விட­யங்கள் புரி­ய­வில்லை. இந்­நி­லை­யி­லேயே ஐ.நா. செய­லாளர் தருஷ்மன் குழுவை நிய­மித்தார். அதா­வது இலங்கை ரோம் சாச­னத்தில் கைச்­சாத்­தி­டா­ததன் கார­ண­மாக இலங்­கைக்கு எதி­ராக நேர­டி­யாக வழக்குத் தொடர முடி­யாது என்­பதால் பான் கீ மூன் தருஷ்மன் குழுவை நிய­மித்தார்.
 
காஸா விவ­காரம்
அதே­வேளை காஸாவில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்­கவும் பான் கீ மூன் நிபுணர் குழுவை நிய­மித்தார். அந்தக் குழுவின் தலை­வ­ராக ஐ.நா. வின் இலங்­கைக்­கான நிரந்­தர பிர­தி­நிதி பாலித்த கோஹன நிய­மிக்­கப்­பட்டார். இதன் பின்­ன­ணி­யி­லேயே அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் ஜெனி­வாவில் தீர்­மா­னங்­களை கொண்­டு­வ­ரு­கின்­றன. அந்­த­வ­கையில் கடந்த வருடம் இலங்­கைக்கு நன்­ன­டத்தை கால­மா­கவே காணப்­பட்­டது. இலங்­கையின் மனித உரிமை நில­மையில் முன்­னேற்றம் ஏற்­படும் என்று உலகம் பார்த்துக்­கொண்­டி­ருந்­தது. ஆனால் எவ்­வி­த­மான முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.
 
எனது சட்­ட­மூலப் பிரே­ரணை
இதன் பின்­ன­ணி­யி­லேயே நீதி­ப­தி­களை பதவி விலக்­கும்­போது பொது­ந­ல­வாய அமைப்பின் விதி­மு­றை­களை பின்­பற்றும் வகை­யி­லான சட்­ட­மூலம் ஒன்றை நான் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வந்தேன். அந்த சட்­ட­மூலம் விவா­திக்­கப்­ப­டாமல் நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது. அதனை நிறை­வேற்­றி­ய­ி­ருந்தால் சர்­வ­தேச மட்­டத்தில் ஒரு மதிப்பை பெற்­றி­ருக்­கலாம். ஆனால் இதனை நிரா­க­ரித்­ததன் மூலம் நாட்டில் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்­தலும் சுயா­தீன நீதித்­து­றையும் இல்லை என்று சர்­வ­தேசம் எண்ணும் அள­வுக்கு நிலைமை வந்­து­விட்­டது. இவ்­வா­றான நிலை­மையில் ஜெனி­வா­வுக்கு சென்று எவ்­வாறு நாட்டில் சுயா­தீ­ன­நீ­தித்­துறை இருப்­ப­தாக கூற முடியும்?
ஜெனிவா வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை
 
சர்­வ­தேச சட்­டங்கள் தெரி­யாமல் அர­சாங்கம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஜெனி­வா­வுக்கு அமைச்­சர்­க­ளான ஜீ.எல். பீரிஸும் மஹிந்த சம­ர­சிங்­கவும் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் தற்­போது ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க தலை­மை­யி­லான குழுவை ஜெனி­வா­வுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.
 
யுத்த வெற்றி என்­பது அ­ரசாங்­கத்­துக்கு மட்டும் உரித்­தா­ன­தல்ல. மாறாக அனை­வரும் பங்­க­ளிப்பு வழங்­கினர். 2006 ஆம் ஆண்டு அர­சாங்­கத்துக்கு ஆத­ரவு வழங்­கு­வது குறித்து ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் உடன்­ப­டிக்கை செய்­தது. ஆனால் அர­சாங்கம் அந்த உடன்­ப­டிக்­கையை மீறி 17 எம்.பி. க்களை எடுத்­தது. அந்த­வ­கையில் நேர்­மை­யான முறையில் நாம் செய்­வ­தற்கு முயற்­சித்த உத­வி­களை அர­சாங்கம் புறக்­க­ணித்­தது.
 
உள்­நாட்டைப் போன்று சர்­வ­தே­சத்­துடன் முடி­யாது
உள்­நாட்டில் அர­சியல் செய்­வ­தைப்­போன்று அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் அர­சியல் செய்ய முடி­யாது. சர்­வ­தே­சத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு முழு­மை­யாக இரா­ஜ­தந்­திரம் அவ­சி­ய­மாகும். இதன் யதார்த்தம் அர­சாங்­கத்­துக்கு இன்னும் புரி­ய­வில்லை. அத­னால்தான் அர­சாங்கம் இருட்டில் தடு­மா­றிக்­கொண்­டி­ரு­க்­கின்­றது.
தமிழ்த் தரப்­புடன் நேர­டி­யாக பேச­வேண்டும்
 
நாட்டின் பிரச்­சி­னையை 2.5 மில்­லியன் தமிழ் மக்­க­ளுடன் பேசித் தீர்த்­தி­ருக்­கலாம். ஆனால் அர­சா­ங்கம் அதனை செய்­ய­வில்லை. பிரச்­சி­னைக்கு தமிழ்த் தரப்­புடன் பேசியே தீர்­வு­கா­ண­வேண்டும். அர­சாங்கம் அதனை செய்­ய­வில்லை. நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன்­வைத்த நல்­லி­ணக்கம் இன்னும் அடை­யப்­ப­ட­வில்லை. இடம்­பெ­யர்ந்த மக்கள் மட்­டுமே மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
 
இரா­ஜ­தந்­திரம் இல்லை
அந்­த­வ­கையில் எதிர்­வரும் மார்ச் மாதம் இலங்­கைக்கு ஜெனி­வாவில் பாரிய நெருக்­கடி உள்­ளது. என்ன நடக்கும் என்று உறு­தி­யாக கூற முடி­யாது. ஆனால் பொரு­ளா­தாரத் தடைக் கூட வரும் அபாயம் உள்­ளது. சர்­வ­தே­சத்­துடன் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­ப­டா­மையே இதற்கு கார­ண­மாகும்.
 
வடக்கில் பிரச்­சினை தீர­வில்லை
வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­தி­ய­துடன் அர­சாங்கம் பிரச்­சினை முடிந்­து­விட்­ட­தாக கரு­து­கின்­றது. ஆனால் தற்­போது பிரச்­சினை தீவி­ர­ம­டைந்­து­விட்­டது. வடக்கு தம்­முடன் இருப்­ப­தாக காட்­டு­வ­தற்கு அர­சா­ங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆனால் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் போன்­று­கூட செயற்­ப­டு­வ­தற்கு வடக்கு மாகாண சபைக்கு சுதந்­திரம் இல்லை. அந்­த­வ­கையில் வடக்கில் இன்று பிரச்­சினை தீவி­ர­ம­டைந்­து­விட்­டது. அதனால் வட மாகாண சபை விசா­ரணை கோரி பிரே­ரணை நிறை­வேற்றும் அள­வுக்கு நிலைமை சென்­று­விட்­டது.
 
சட்­ட­வி­ரோ­த­மா­னது
கேள்வி வடக்கு மாகாண சபையில் சர்­வ­தேச விசா­ரணை கோரி பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளமை அர­சாங்­கத்தில் எவ்­வாறு தாக்கம் செலுத்தும்?
பதில் மாகாண சபை ஒன்­றுக்கு இவ்­வாறு சர்­வ­தேச விசா­ரணை கோரி பிரே­ரணை நிறை­வேற்ற முடி­யாது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு முற்­றிலும் விரோ­த­மா­னது. 13 ஆம் திருத்தச் சட்­டத்தில் இது தொடர்பில் ஏற்­பா­டுகள் எதுவும் கூறப்­ப­ட­வில்லை. எனவே இது அர­சி­ய­ல­மைப்­புக்கு அப்­பாற்­பட்ட விட­ய­மாகும். . இந்த விட­யத்தைக் காரணம் காட்டி மாகாண சபை கலைக்­கக்­கூ­டப்­ப­டலாம். ஆனால் இது பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யாது
 
கேள்வி இதனால் அர­சாங்­கத்துக்கு என்ன பாதிப்பு?
பதில் சட்ட ரீதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சர்­வ­தேச மட்­டத்தில் தற்­போதைய நிலை­மையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தலாம்.
 
அர­சியல் நோக்கம்
கேள்வி வட மாகாண முத­ல­மைச்சர் சட்டம் தெரிந்­தவர். இந்தப் பிரே­ரணை அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என்றால் அவர் ஏன் இதனை செய்­ய­வேண்டும்?
பதில் முத­ல­மைச்சர் சட்டம் தெரிந்­த­வ­ராக இருப்­பினும் அனைத்து அர­சியல் விட­யங்­க­ளுக்கு உட்­பட்­டது என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.
 
நேரடி பேச்சு அவ­சியம்
கேள்வி பிர­ச்­சி­னையை தீர்க்க அர­சாங்கம் கூட்­ட­மைப்­புடன் நேர­டி­யாக
பேச்­சு­ந­டத்­த­வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்­றீர்­களா?
பதில் உள்­நாட்டில் பிரச்­சி­னையை தீர்க்க அர­சாங்கம் தமிழ்த் தரப்­புடன் பேச்சு நடத்­தியே தீர­வேண்டும். அந்­த­வ­கையில் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­ந­டத்­த­வேண்டும். சர்­வ­தேசம் உத­வி­களை வழங்­கலாம். ஆனால் தமிழ்த் தரப்­புடன் பேசினால் மட்­டுமே தீர்வைப் பெறலாம்.
ஆத­ரவு வழங்க நாம் தயார்
கேள்வி ஜெனி­வாவில் பொரு­ளா­தார தடைகள் வரும் அபாயம் உள்­ள­தாக கூறு­கின்­றீர்கள். அப்­ப­டி­யானால் அவ்­வாறு நிலைமை வந்தால் அர­சாங்­கத்துக்கு ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ரவு வழங்­குமா?
பதில் அர­சாங்கம் நேர்­மை­யான முறையில் எமது ஆத­ரவைக் கோரினால் இந்த விட­யத்தில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். ஆனால் எமது உத­வி­களை அர­சா­ங்கம் புறக்­க­ணிக்­கின்­றது. நேர்­மைான முறையில் கேட்டால் நாம் நாட்­டுக்­காக ஆத­ரவு வழங்­குவோம்.
கேள்வி அவ்­வாறு அர­சாங்­கத்துக்கு ஆத­ரவு வழங்­கினால் அதனால் தமிழ் மக்கள் தமக்கு அநீதி ஏற்­ப­டு­வ­தாக கரு­து­வார்­களா?
பதில் தமிழ் மக்கள் அவ்­வாறு எண்­ணு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது. ஆனால் பொரு­ளா­தார தடைகள் என்­பது தென்­ப­குதி மக்­களை மட்டும் பாதிக்கும் விட­ய­மல்ல. வட பகு­தி­யையும் பாதிக்கும். எனவே நாட்டின் அனைத்து மக்­களின் நன்­மைக்­கா­கவே நாங்கள் இந்த இடத்தில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்க தயா­ராக இருப்­ப­தாக கூறு­கின்றோம்.
வடக்கில் அபிவிருத்தி பிரச்சினையை தீர்க்காது
வடக்கை பொறுத்தவரை அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்வதிலோ வீதியை செப்பனிடுவதிலோ மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். அந்த மக்களுக்கு அபிமானம் மற்றும் கெளரவம் தொடர்பான பிரச்சினை உள்ளது. அதனை தீர்க்கவேண்டும். அதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்குக்கு அபிவிருத்தி என்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியம்
கேள்வி இலங்கை தொடர்பில் அமெரிக்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ?
பதில் யுத்தக் குற்ற விடயம் குறித்த அமெரிக்க பிரதிநிதி ஒருவர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். தற்போது அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் வருகிறார். இவர்கள் இங்கு வந்து தமது நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களையே திரட்டு கின்றனர். அந்தவகையில் இலங் கைக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை ஜெனி வாவில் எடுப்பதற்கான சாத்தியம் காண ப்படுகின்றது.
இந்த நிலையில் இவற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கலாம். ஆனால் அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவவேண்டும். 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும்.

Post a Comment

0 Comments