Subscribe Us

header ads

அந்தரத்தில் உறங்கிய திகில் விரும்பி

ஆஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த திகில் விரும்­பி­யொ­ருவர் தரை­யி­லி­ருந்து 100 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்பி இணைப்­பொன்றில் நடந்து சென்று அதன் மத்­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த படுக்­கையில் உறங்கி அந்த வழி­யாக சென்ற பாத­சா­ரி­களை வியப்பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

ஐகொர் ஸ்கொட்லான்ட் என்ற மேற்­படி நபர் வியன்­னாவில் ஹோஸ் டி மீரெஸ் மிரு­கக்­காட்சிசாலையில் பொது நீர் அருங்­காட்­சி­ய­கத்­தி­லுள்ள கட்­ட­டத்­துக்கும் பிறி­தொரு கட்­ட­டத்­துக்­கு­மி­டையே வீதிக்கு மேலாக அந்­த­ரத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தொங்கு படுக்­கையில் உறங்­கியே இவ்­வாறு சாகஸம் செய்­துள்ளார்.


ஸ்கொட்லான்ட் அந்த தொங்கு படுக்­கையில் சுமார் 12 மணித்­தி­யா­லங்­களை கழித்துள்ளார்.


மலை ஏறும் வீர­ரான அவர் வியன்னா சிலக்­லைனர்ஸ் எனும் உய­ர­மான இடங்­களில் ஏறும் குழுவில் அங்­கத்­துவம் வகிக்­கிறார்.


ஸ்கொட்லான்ட் மேற்­படி சாக­ஸத்தை மேற்­கொள்ளும் காட்­சியை புகைப்­படக்கலை­ஞ­ரான செபஸ்­ரியன் வஹ்ல்ஹிட்டா கட்டடமொன்றின் கூரையிலிருந்தவாறு புகைப்படமெடுத் துள்ளார்.



 

Post a Comment

0 Comments