Subscribe Us

66ஆவது சுதந்திர தின தேசிய விழா கேகாலை நகரில்

இலங்கையின் 66ஆவது சுதந்திரத்தின தேசிய விழா இம்முறை கேகாலை
நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திரத்தினத்தின் தொனிப்பொருள் 'ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்- உலகை வென்ற நாட்டில்' என்பதாகும். சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி கொழும்பு 7 ல் அமைந்துள்ள சுதந்திரச் சதுக்கத்தில் சமய அனுஷ்டானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திரத் தினத்தில் தேசிய கீதத்தைப் பாடுவதற்கான அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவ மாணவிகள் 110 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். கலாசார ஊர்வலமொன்றும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம்முறை முப்படையினர்- பொலிஸார்- சிவில் பாதுகாப்பு படை- தேசிய மாணவர் படை மற்றும் இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுதும் 3500 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment

0 Comments