Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஜனவரி 23

1368 : சூ யுவான்ஷாங், சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

1556 : சீனாவின் சாங்சி மாநில பூகம்பத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட பூகம்பம் இதுவாகும்.

 1570 : ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1719 : புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.

1789 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் பல்கலைக்கழகமான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 1793 : ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தன.

 1833 : போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1870 : மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1874 : விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1924 : விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1937 : லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மொஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

 1943 : இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1943 : இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் ஜப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

1950 : இஸ்ரேலின் சட்டசபை ஜெருஸலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 : இந்தியாவின் சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1963: கினியாபிஸோ சுதந்திரப் போர்  ஆரம்பமாகியது.

1973 : வியட்நாமில் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்ஸன் அறிவித்தார்.

 2002 : அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

 2005 : திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments