Subscribe Us

header ads

டிசிடி பரிசோதனையில் தாமதம் இல்லை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் மீதான டிசிடி பரிசோதனையில் தாமதம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
துறைமுகத்தில் சுங்கப் பிரிவினரிடம் இருந்து பால் மா வகைகள் பெறப்பட்டு டிசிடி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனினும் டிசிடி பரிசோதனை தாமதத்தால் சுங்கப் பிரிவில் பால் மா வகைகள் நிறைந்து காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால் தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைந்து முறையான பரிசோதனை துரிதகதியில் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

நன்றி: அத தெரண

Post a Comment

0 Comments