
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 8ம் வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கண்ட உறவினர் ஒருவர் நேற்று திம்புள்ளை–பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின்னர் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி இன்று திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போது, 2012ம் வருடத்தில் இருந்து ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவர் பாட்டியின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆசிரியர் இவ்வாறு துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர், ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதுடன் இரண்டு பிள்ளைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் நாளை (04) ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ளை–பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஆசிரியர் கைது சம்பவத்தை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பாளர் தஸநாயக்கவும் உறுதி செய்துள்ளார்.
நன்றி:அத தெரண
0 Comments