லையில் விவாதிக்கப்பட்ட
சந்தர்ப்பத்தில் மங்கள சமரவீர எம்.பி.க்கு தொடர்ந்தும் ஆளும்
கட்சியினர் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்த
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உங்களது (ஆளும் கட்சியினரைப் பார்த்து)
நடவடிக்கைகளை பார்க்கையில் மங்கள சமரவீர எம்.பி.யின்
கருத்துகளில் உண்மை இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது எனத்
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2014 ஆம் ஆண்டுக்கான
வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவாதத்தை ஐக்கிய
தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி.யான மங்கள சமரவீர
ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மீதே நேற்றைய விவாதம் இடம்பெற்றது.
இதன்போது,- பேசிய மங்கள சமரவீர எம்.பி. மனித உரிமைகள் தொடர்பிலான
விடயங்கள், கொம்பனித்தெருவில் வீடுகள் தகர்க்கப்பட்டமை,
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும்
பிரித்தானியாவின் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு நிதியளிப்பு ஆகிய
விடயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது ஆளும் கட்சியினர்
தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.
ஏ.எச்.எம்.அஸ்வர், அமைச்சர் மேர்வின் சில்வா,- பிரதியமைச்சர் லலித்
திஸாநாயக்க உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்ட
வண்ணமிருந்தனர்.
சபையின் குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்கு சபாநாயகர் பல தடவை
முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், அது
செவிமடுக்கப்படாததால் மங்கள கூறும் கூற்றுகள் உங்களது
நடத்தையினூடாக பார்க்கையில் உண்மையிருக்கிறது என்றே
தோன்றுகின்றது என்றார்.
இதேவேளை, சம்பந்தன் எம்.பி. உரையாற்றியபோது ஆளும் கட்சியினர்
இடையூறுகளை ஏற்படுத்திய அதேவேளை அமைச்சர் தினேஷ் குணவர்தன
உரையாற்றிய சந்தர்ப்பத்தில் அவருக்கு ரவிகருணாநாயக்க மற்றும்
மங்கள சமரவீர, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய எம்.பி.க்களும் முரண்பட்டனர்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஆவேசமடைந்த சுமந்திரன் எம்.பி. ஆளும்
கட்சியின் சூரியப்பெரும எம்.பி.யைப் பார்த்து சிங்கள மொழியில் உச்ச
தொனியில் திட்டினார்.
உங்களது கருத்தை எழுந்து நின்று கூறுமாறும் ஒளிந்து கொண்டு பேச வேண்டாம் என்றும் கூறினார்.
இதனால்,- நேற்றைய குழு நிலையின் இரண்டாம் நாள் முற்பகல் விவாதத்தி்ல் முக்கோண அடிப்படையில் குழப்ப நிலையும் உருவாகியிருந்தது.
நன்றி: வீரகேசரி.
நன்றி: வீரகேசரி.
0 Comments