அவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் மற்றவர்களுடன் எவ்வாறு அன்பு கொள்வது, எவ்வாறு நடந்து
கொள்வது பற்றி ஒவ்வொரு மனிதனும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனால்
படைக்கப்பட்ட மனிதன் மற்றவர்களை எவ்வாறு நோக்குகிறான்? அவருடன் எப்படி பழகுவது?
அவருடன் எவ்வாறு சினேகிதனாக முடியும் என்பது பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றவருடன் எவ்வாறு பழகுவது என்று கூட
தெரியாதவர்களாகவும் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்து கொள்வது, பிள்ளைகள்
தமது பெற்றோருடன் எவ்விதம் நடந்து கொள்வது என்பது தொடர்பாகவும் தெரியாதவர்களாக
இருக்கிறார்கள்.
எமது சகோதர உறவுகளுடன் எவ்வாறு நட்பு கொள்வது என்பது பற்றியும் இஸ்லாம் மிகவும்
தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. ஒரு மனிதரிடம் நட்பு கொள்வது எவ்வாறு என்று இஸ்லாம்
பின்வரும் 6 விடயங்கள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளது.
ஒரு மனிதர் வீட்டுக்கு அல்லது எதேச்சையாக சந்திக்கும் போது அவரை அன்புடன் மனமுவந்து
ஸலாம் கூறி அழைக்க வேண்டும். அவ்வாறு அழைக்கும் போது அவரும் முகமலர்ந்து பதில்
கூறுவார். வெறுமனே உள்மனதில் வேறொரு நினைப்பில் கெட்ட எண்ணத்துடன் வரவேற்காமல்
உண்மையாக அவரை வரவேற்க வேண்டும். வேற்று மதத்தவராக இருந்தால் குட் மோனிங் அல்லது
அதற்கு ஏற்றவாரான வார்த்தைகளை பிரயோகிக்க முடியும்.
உங்களை சந்திக்கும் நபரை உள்ளன்புடன் சிரித்த முகத்துடன் உரையாடல்களை ஆரம்பிக்க
வேண்டும். மாறாக முகத்தை வேறு பக்கமாக வைத்துக் கொண்டு அல்லது அவரது முகத்தைப்
பார்க்காமல் வேறு பக்கமாக பார்த்துக் கொண்டு கதைக்க கூடாது.
வந்தவர்களை பெயர் கூறி அழைக்க வேண்டும். வயது வந்தவர்களாக இருந்தால் அதற்கு
ஏற்றவாறும் சிறு பிள்ளைகளாக இருந்தால் அவர்களை கவரும் வகையில் செல்லப் பெயர் கொண்டு
அழைக்க வேண்டும். மாறாக குண்டாக இருந்தால் குண்டன் என்றோ கறுப்பாக இருந்தால்
கறுப்பன் என்றோ புனைப்பெயர்கள் கொண்டு அழைக்கக் கூடாது.
அடுத்ததாக வந்தவர்களை பேச விட வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை உன்னிப்பாக
அவதானிக்க வேண்டும். மாறாக எமது பெருமைகளை அவர்களிடம் கூறவோ அல்லது தேவையற்ற
விடயங்களை நாம் கூறவோ முற்படக்கூடாது. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று அவதானித்து
அதற்கு மாத்திரம் பதில் வழங்குபவராக இருக்க வேண்டும்.
மேலும் என்ன விடயம் தொடர்பாக பேசுகிறார் என்பது தொடர்பாக தெளிவாக இருக்க வேண்டும்.
அவர் கூறும் விடயத்திற்கு மாறாக நாம் வேறு ஏதாவது பற்றி கதை கூறுவது அவருக்கு பெரிய
அவமானமாக மாறிவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, அவர் என்ன கருப்பொருளில்
கதைக்கின்றாரோ அதற்கு ஏற்றாற் போல் நாமும் அவருடன் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
இறுதியாக அவர் விடைபெற்று செல்லும் போது நாம் உள்ளத்தால் சிரித்த முகத்துடனேயே
அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது எமது நினைவாக நாம் ஏதாவது
நகைச்சுவையாக வேண்டுமானால் எதையாவது கூறி அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு மனிதன் எச்சில் துப்புவது முதல் மணம் முடிக்கும் வரையிலான ஒவ்வொரு
செயற்பாடுகளுக்கும் இறைமறையில் அல்லாஹ்தஆலா தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளான்.
மனிதன் இவ்வுலகில் பிறந்தது முதல் இறுதி மூச்சுவிடும் வரையில் எவ்வாறு வாழ
வேண்டுமென்பது குறித்தும் நபி (ஸல்) அவர்களினூடாக மனிதனுக்கு எடுத்தியம்பியுள்ளான்.
இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களினூடாக சிறந்த நண்பரை, தோழனை உங்கள் வாழ்க்கையில்
அடைந்து கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக.
By: S.A Ashmiya
By: S.A Ashmiya
0 Comments