
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2014ஆம்
ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் சட்டமும் ஒழுங்கும்
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி ஆகிய இரு அமைச்சுக்களுக்கான
நிதி யொதுக்கீட்டு முன்மொழிவு தொடர்பான குழுநிலையின் இரண்டாம் நாள்
விவாதத்தில் கலந்து பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர்
கெஹலிய மேலும் கூறுகையில்,
ஜனநாயகம், சுயாதீனமான தேர்தல், புனர்வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள்
குறித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா. சம்பந்தன் இந்த சபையில் உரைநிகழ்த்தியிருந்தார்.
அவரது அனைத்து எடுத்துக்காட்டல்களும் வடக்கில் இருந்து இராணுவத்தை
வெளியேற்றும் நோக்கமே அடங்கியிருந்தது. சம்பந்தனைப்
பொறுத்தவரையில் அவரது உரையானது புலம்பெயர் தமிழர்களுக்காகவே
அமைந்திருந்தது.
யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதிலும் நாணயத்தின்
இன்னொரு பக்கமாக புலம்பெயர்ந்தோர் இன்னும் செயற்பட்டு வருகின்றனர்.
அவற்றின் பிரதிபலிப்பில்தான் ஐ.நா. மனத உரிமைகள் உயர்ஸ்தானிகர்
நவநீதம்பிள்ளை மற்றும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோரின்
செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
மேலும் கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி. புலிகளின் தலைவரை போராட்ட வீரராக வர்ணித்திருந்தார்.
கே.பி.யை தெரியாது என்று சம்பந்தன் எம்.பி. கூறினாலும்
பிரபாகரனுக்கு ஆதரவாக செயற்படவில்லை என்று அவரால் கூறமுடியாது.
அப்படி சொல்வாரெனில் சிறிதரன் எம்.பி. யின் உரையை அவர் வாபஸ்
பெறவேண்டும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழர் தாயகக் கொள்கையை
இன்னும் கைவிட்டதாக இல்லை. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அந்த வகையில் பார்க்கும் போது புலிகளின் நாணயத்தில் மறுபக்கமாகவே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.
பாதுகாப்புப் படை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமானது.
தற்காலிக மானது என்பதையே இது சுட்டி நிற்கிறது. இதற்கு இடம்கொடுக்க
முடியாது என்றார்.
நன்றி: வீரகேசரி.
0 Comments