
இதன்மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த 112 மில்லியன் வரி இல்லாது
போயுள்ளதென சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
ஒருகொடவத்தை சுங்க களஞ்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எத்தனோல் தொகை 7 கொள்கலன்களில் மீட்கப்பட்டது.
அதன் பெறுமதி இன்று கணிப்பிடப்பட்டதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.
குறித்த 7 கொள்கலன்களிலும் 74,480 லீட்டர் எத்தனோல் காணப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
(அத தெரண)
0 Comments