2013ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் ஒரு நாள் போட்டிகளுக்கான கனவு அணியில் திலகரட்ண டில்ஷான், குமார் சங்கக்கார, லசித் மலிங்க ஆகிய 3 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த கனவு ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் தலைவராக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி.யின் ஆண்டின் மக்கள் மனம் கவர் வீரர் விருதுக்கும் மஹேந்திர சிங் டோணி தெரிவாகியுள்ளார்.
தொடச்சியாக கடந்த 2 வருடங்களாக மக்கள் மனம் கவர் வீரராக தெரிவான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இம்முறை தெரிவில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருதுக்கு ஐ.சி.சி.யினால் பரிந்துரைக்கப்படும் 5 வீரர்களில் ஒருவரை கிரிக்கெட் ரசிகர்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார்.
கனவு ஒரு நாள் அணி விபரம்
இந்த கனவு ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் தலைவராக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி.யின் ஆண்டின் மக்கள் மனம் கவர் வீரர் விருதுக்கும் மஹேந்திர சிங் டோணி தெரிவாகியுள்ளார்.
தொடச்சியாக கடந்த 2 வருடங்களாக மக்கள் மனம் கவர் வீரராக தெரிவான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இம்முறை தெரிவில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருதுக்கு ஐ.சி.சி.யினால் பரிந்துரைக்கப்படும் 5 வீரர்களில் ஒருவரை கிரிக்கெட் ரசிகர்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார்.
கனவு ஒரு நாள் அணி விபரம்
திலகரட்ண டில்ஷான், ஷிகார் தவான், ஹஸீம் அம்லா, குமார் சங்கக்கார, ஏ.பி.டி வில்லியர்ஸ், எம்.எஸ். டோணி, ரவீந்திர ஜடேஜா, ஸயீட் அஜ்மல், மிச்செல் ஸ்டார், ஜேம்ஸ் அண்டர்ஸன், லசித் மலிங்க, மிட்செல் மெக்லகன் (12ஆவது வீரர்)
0 Comments