
கே.பி. என்றொரு நபர் இருக்கின்றார். அவரை இன்று வரையில் நான்
பார்த்ததும் கிடையாது. ஆனால்இ அவர் அரசாங்கத்துடன்தான்
இருக்கின்றார். அரசாங்கத்தின் நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார்
என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தனின் மேற்படி கருத்துக்கு அந்த
சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திலிருந்து எந்தவொரு பதிலும்
வெளிப்படவில்லை அமைதியே காக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2014ஆம்
ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் நாள் குழுநிலையில்
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து
கேள்வியும் எழுப்பினார். சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
கே.பி. என்றொரு நபர் இருக்கின்றார். அவரை நான் இன்றுவரையில்
பார்த்ததில்லை. ஆனால்இ அவர் அரசாங்கத்துடன் இருக்கின்றார். அவர்
அரசாங்கத்தின் மிகவும் நெருங்கிய நண்பராகவும் செயற்பட்டு
வருகின்றார். அதேபோன்று கிழக்கில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு
பொறுப்புக்கூறக்கூடியவர் என்று நல்லிணக்க ஆணைக்குழுவில்
குறித்துரைக்கப்பட்டுள்ள ஒருவர் அரசாங்கத்தின் அமைச்சர்
பட்டியலில் இருக்கின்றார். அதேபோன்று மற்றுமொருவர் கிழக்கின்
முதலமைச்சராக இருந்து தற்போதும் உறுப்பினராக இருக்கின்றார்.
அவ்வாறு பார்க்கும்போது விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் எந்தத்
தொடர்பும் கிடையாது. அவர்களுடன் நாம் செய்து கொண்டது எதுவும்
கிடையாது.
ஆனால், நீங்கள் தான் (ஆளும் கட்சியைப் பார்த்து) புலிகளுடன் அநேகமான
நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள். 2005ஆம் ஆண்டு
இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழீழ விடுதலைப் புலிகள்
உங்களுக்கு உதவி புரிந்ததாலேயே தேர்தலில் வெற்றி கிடைத்தது என்பதை
உங்களது அரசாங்கத்தால் மறுத்துரைக்க முடியுமா எனக் கேட்கின்றேன்.
விடுதலைப்புலிகளுடன் எனக்கோ அல்லது எமக்கோ எந்தத் தொடர்பும்
கிடையாது.
எனினும், அரசியல் தீர்வொன்றுக்கான இணக்கப்பாட்டினை
எற்படுத்திக்கொள்ளும் பொருட்டே நாம் புலிகளுடன் தொடர்புகளை
ஏற்படுத்திக் கொண்டோம். ஆனாலும் வன்முறைகளுடன் எமக்கு எந்தத்
தொடர்பும் கிடையாது. அரசுதான் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை
ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது
என்றார்.
இதேவேளைஇ வலிகாமம் மற்றும் கட்டுவன் பிரதேசங்களில் வீடுகள் மற்றும்
கட்டிடங்கள் தகர்க்கப்படும் செயற்பாடுகள் குறித்து கடந்த அக்டோபர்
மாதத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த அதேவேளைஇ இவ்வாறான
சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து நிறுத்துமாறும் இதற்கு இடமளிக்க
வேண்டாம் என்றும் நேரடியாகக் கேட்டிருந்தோம்.
இதன் பின்னர் இத்தகைய சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது
என்று ஜனாதிபதியின் தரப்பில் உறுதி வழங்கப்பட்டது. இருந்த போதிலும்
உறுதி மொழி வழங்கப்பட்டு இரு தினங்களில் தெல்லிப்பழை வைத்தியசாலை
வசாவிளானில் வீடுகள் இடித்து தகர்க்கப்பட்டன. இதுதான் ஜனாதிபதியின்
உறுதிமொழிக்கான பெறுமதியாகவும் அவரது உத்தரவுக்கான மதிப்பும்
என்ற வகையில் அமைந்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவு
மீறப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்தேன்.
அத்துடன் நின்று விடாது சில தினங்களுக்கு முன்னர் கூட வலிகாமத்தில்
நடேஸ்வரா கல்லூரியும் இந்து ஆலயங்களும் இடித்து அழிக்கப்பட்டன.
இதனைச் செய்தது யார் என்பது தெரியாது. இத்தகைய செயல்களுக்கு
அங்கீகாரம் அளிப்பது நல்லதல்ல என்பதைக் கூறி வைக்கிறேன்.
மேலும்இ நடேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவிருந்த வீடொன்று
தகர்க்கப்பட்ட சமயத்தில் அங்கு பாதுகாப்புக் கருதி புதைத்து
வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்
அதனை ஹெலிகொப்டர் மூலம் கொண்டு சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. இது
அனுமதிக்க முடியாத செயற்பாடாகும்.
வடக்கில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின்போது இடம்பெற்றிருந்த
இராணுவப் பிரசன்னம்இ இராணுவத்தின் செயற்பாடுகள்இ தலையீடுகள்
ஆகியவை குறித்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொதுநலவாய, சார்க்,
பவ்ரல் மற்றும் கபே போன்ற அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. இவை
ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
போட்டித்தன்மைகளுக்கு மத்தியில் இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் அதிக
ரித்திருப்பதை அனுமதிக்க முடியாது. அடுத்த வருடத்தை (2014) தேர்தல் வருடமாக
பிரகடனப்படுத்தியிருக்கும் வகையில் பல தேர்தல்கள் இடம்பெற விருக்கின்றன.
இந்நிலையில் இராணு வப்பிரசன்னம், தலையீடுகள் இடம்பெறவும்
வாய்ப்பிருக்கின்றது என்றார்.
நன்றி: வீரகேசரி.
நன்றி: வீரகேசரி.
0 Comments