Subscribe Us

header ads

புலிகளுடன் அரசுக்கே நெருங்கிய தொடர்பு : சபையில் சம்பந்தன்

  தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் அர­சாங்­கத்­துக்கே நெருங்­கிய தொடர்­புகள் இருந்­தன. தற்­போதும் இருந்து வரு­கின்­ற­னவே தவிரஇ புலி­க­ளுக்கும் எனக்­குமோ அல்­லது புலி­க­ளுக்கும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்­குமோ எந்­த­வி­த­மான தொடர்பும் கிடை­யாது. 2005இல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் புலிகள் உதவி புரிந்­த­தா­லேயே வெற்றி கிடைத்­தது என்­பதை அர­சாங்­கத்தால் மறுத்­து­ரைக்க முடி­யுமா என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்­பந்தன் நேற்று சபையில் ஆளும் கட்­சி­யி­னரைப் பார்த்துக் கேட்டார்.
  கே.பி. என்­றொரு நபர் இருக்­கின்றார். அவரை இன்று வரையில் நான் பார்த்­ததும் கிடை­யாது. ஆனால்இ அவர் அர­சாங்­கத்­து­டன்தான் இருக்­கின்றார். அர­சாங்­கத்தின் நெருங்­கிய நண்ப­ரா­கவும் இருக்­கிறார் என்றும் அவர் குறிப்­பிட்டார். சம்­பந்­தனின் மேற்­படி கருத்­துக்கு அந்த சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து எந்­த­வொரு பதிலும் வெளிப்­ப­ட­வில்லை அமை­தியே காக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு- செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு­நி­லையில் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சு தொடர்­பி­லான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்து கேள்­வியும் எழுப்­பினார். சம்­பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,
கே.பி. என்­றொரு நபர் இருக்­கின்றார். அவரை நான் இன்­று­வ­ரையில் பார்த்­த­தில்லை. ஆனால்இ அவர் அர­சாங்­கத்­துடன் இருக்­கின்றார். அவர் அர­சாங்­கத்தின் மிகவும் நெருங்­கிய நண்­ப­ரா­கவும் செயற்­பட்டு வரு­கின்றார். அதே­போன்று கிழக்கில் இடம்­பெற்ற சில சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­றக்­கூ­டி­யவர் என்று நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவில் குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்ள ஒருவர் அர­சாங்­கத்தின் அமைச்சர் பட்­டி­யலில் இருக்­கின்றார். அதே­போன்று மற்­று­மொ­ருவர் கிழக்கின் முத­ல­மைச்­ச­ராக இருந்து தற்­போதும் உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார். அவ்­வாறு பார்க்­கும்­போது விடு­தலைப் புலி­க­ளுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடை­யாது. அவர்­க­ளுடன் நாம் செய்து கொண்­டது எதுவும் கிடை­யாது.
ஆனால், நீங்கள் தான் (ஆளும் கட்­சியைப் பார்த்து) புலி­க­ளுடன் அநே­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றீர்கள். 2005ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது தமி­ழீழ விடு­தலைப் புலிகள் உங்­க­ளுக்கு உதவி புரிந்­த­தா­லேயே தேர்­தலில் வெற்றி கிடைத்­தது என்­பதை உங்­க­ளது அர­சாங்­கத்தால் மறுத்­து­ரைக்க முடி­யுமா எனக் கேட்­கின்றேன். விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் எனக்கோ அல்­லது எமக்கோ எந்தத் தொடர்பும் கிடை­யாது.
எனினும், அர­சியல் தீர்­வொன்­றுக்­கான இணக்­கப்­பாட்­டினை எற்­ப­டுத்­திக்­கொள்ளும் பொருட்டே நாம் புலி­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொண்டோம். ஆனாலும் வன்­மு­றை­க­ளுடன் எமக்கு எந்தத் தொடர்பும் கிடை­யாது. அர­சுதான் புலி­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது. ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது என்றார்.
இதே­வேளைஇ வலி­காமம் மற்றும் கட்­டுவன் பிர­தே­சங்­களில் வீடுகள் மற்றும் கட்­டி­டங்கள் தகர்க்­கப்­படும் செயற்­பா­டுகள் குறித்து கடந்த அக்­டோபர் மாதத்தில் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு வந்த அதே­வேளைஇ இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுத்து நிறுத்­து­மாறும் இதற்கு இட­ம­ளிக்க வேண்டாம் என்றும் நேர­டி­யாகக் கேட்­டி­ருந்தோம்.
இதன் பின்னர் இத்­த­கைய சம்­ப­வங்கள் இனி­வரும் காலங்­களில் இடம்­பெ­றாது என்று ஜனா­தி­ப­தியின் தரப்பில் உறுதி வழங்­கப்­பட்­டது. இருந்த போதிலும் உறுதி மொழி வழங்­கப்­பட்டு இரு தினங்­களில் தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சாலை வசா­வி­ளானில் வீடுகள் இடித்து தகர்க்­கப்­பட்­டன. இதுதான் ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழிக்­கான பெறு­ம­தி­யா­கவும் அவ­ரது உத்­த­ர­வுக்­கான மதிப்பும் என்ற வகையில் அமைந்­துள்­ளது. ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவு மீறப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லா­ள­ருக்கு அறி­வித்தேன்.
அத்­துடன் நின்று விடாது சில தினங்­க­ளுக்கு முன்னர் கூட வலி­கா­மத்தில் நடேஸ்­வரா கல்­லூ­ரியும் இந்து ஆல­யங்­களும் இடித்து அழிக்­கப்­பட்­டன. இதனைச் செய்­தது யார் என்­பது தெரி­யாது. இத்­த­கைய செயல்­க­ளுக்கு அங்­கீ­காரம் அளிப்­பது நல்­ல­தல்ல என்­பதைக் கூறி வைக்­கிறேன்.
மேலும்இ நடேஸ்­வரா கல்­லூ­ரிக்கு முன்­பா­க­வி­ருந்த வீடொன்று தகர்க்­கப்­பட்ட சம­யத்தில் அங்கு பாது­காப்புக் கருதி புதைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு தொகை தங்கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் அதனை ஹெலி­கொப்டர் மூலம் கொண்டு சென்­ற­தா­கவும் தெரிய வந்­துள்­ளது. இது அனு­ம­திக்க முடி­யாத செயற்­பா­டாகும்.
வடக்கில் இடம்­பெற்ற மாகாண சபை தேர்­தல்­க­ளின்­போது இடம்­பெற்­றி­ருந்த இரா­ணுவப் பிர­சன்னம்இ இரா­ணு­வத்தின் செயற்­பா­டுகள்இ தலை­யீ­டுகள் ஆகி­யவை குறித்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொதுநலவாய, சார்க், பவ்ரல் மற்றும் கபே போன்ற அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. இவை ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
போட்டித்தன்மைகளுக்கு மத்தியில் இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் அதிக ரித்திருப்பதை அனுமதிக்க முடியாது. அடுத்த வருடத்தை (2014) தேர்தல் வருடமாக பிரகடனப்படுத்தியிருக்கும் வகையில் பல தேர்தல்கள் இடம்பெற விருக்கின்றன. இந்நிலையில் இராணு வப்பிரசன்னம், தலையீடுகள் இடம்பெறவும் வாய்ப்பிருக்கின்றது என்றார்.

நன்றி: வீரகேசரி.

Post a Comment

0 Comments