
இளவரசர் சார்ள்ஸ் நேற்று காலை கண்டி தலதா மாளிகை, அஸ்கிரிய, மல்வத்த
பௌத்த பீடங்களுக்கு விஜயம் செய்ததுடன் பேராதனை தாவரவியல்
பூங்காவுக்கும் விஜயம் செய்தார். இதன் பின்னர் நுவரெலியாவுக்கு சென்ற
அவர் கள் அங்குள்ள
லபுக்கலை தேயிலை தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், அங்கு
அமைக்கப்பட் டிருந்த அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.
கடந்த வியாழக்கிழமை இலங்கை வந்த பிரித்தானிய இளவரசர்
வெள்ளிக்கிழமை ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை
உத்தியோகபூர்வமாக ஆரம்பி த்து வைத்தார். அந்த வைபவத்தின் பின் னர்
அவர் கொழும்பு அரும்பொருட் காட்சி சாலைக்கு கண்காணிப்பு பயணம் ஒன்றை
மேற்கொண்டார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து
கொள்ள வந்துள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள்,
வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதிதிகளுக்கான விசேட இராப்போசன
விருந்துபசாரம் வெள் ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.
பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி இரண்டாவது
எலிஸபெத் சார்பில் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், கமிலா பாக்கர்
தம்பதியர் இந்த இராப்போசன விருந்தை ஏற்பாடு செய் திருந்தனர். இந்த
இராப்போசன விருந்து கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்
நடைபெற்றது.
0 Comments