Subscribe Us

header ads

ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோர் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்: நிந்தவூரில் பதற்றம்

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை நிந்தவூர் பிரதேசத்தில் இடைமறித்து ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதையடுத்து பொதுமக்கள் பொலிஸார் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனால் இப் பகுதியில் தற்போது பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இரவு படை­யி­ன­ருக்கும் பொது மக்­க­ளுக்­கு­மி­டையே ஏற்­பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்­றைய தினம் அப் பகு­தியில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. 
 
இதன் கார­ண­மாக பாட­சா­லைகள், அர­சாங்க மற்றும் தனியார் நிறு­வ­னங்கள், வங்­கிகள், வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­ட­துடன் போக்­கு­வ­ரத்தும் தடைப்­பட்­டது. கடந்த இரு வார கால­மாக நிந்­தவூர் பிர­தே­சத்தில் இரவு வேளை­களில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­துடன் அச்­சு­றுத்தும் வகை­யிலும் நடந்து கொண்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்ம நபர்கள் சிலரை நேற்று முன்­தினம் இரவு கடற்­க­ரையில் வைத்து பொது மக்கள் மடக்கிப் பிடித்­த­தை­ய­டுத்து அங்கு பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது.
 
இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த பாது­காப்பு தரப்­பினர் குறித்த மர்ம நபர்­களை அங்­கி­ருந்து மீட்டுச் சென்­ற­துடன் வானை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தையும் மேற்­கொண்­டனர். இத­னை­ய­டுத்து பிர­தேசத்தில் பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­ட­துடன் மக்கள் அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்­டனர்.
 
இச் சம்­ப­வத்தைக் கண்­டித்தும் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மர்ம நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு கோரி­யுமே பொது மக்கள் நேற்­றைய தினம் ஹர்த்தால் அனுஷ்­டித்­தனர்.
 
இந்நிலையில் இன்று காலை கல்முனை - அக்கரைப்பற்று வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டுள்ளதோடு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று பேரையும் கை தும் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது குறித்தப் பகுதியில் 500ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments