Subscribe Us

header ads

இலங்கை–நியூஸிலாந்து இருபது -20 தொடர் இன்று ஆரம்பம்

 
 
நியூ­ஸி­லாந்து அணி­யு­ட­னான இரு­பது-–20 தொட­ருக்­கான இலங்கை அணி­யி­லி­ருந்து திமுத் கரு­ணா­ரத்ன, ரங்­கன ஹேரத் மற்றும் அஷன் பிரி­யஞ்சன் ஆகியோர் கழற்றி விடப்­பட்­டுள்­ளனர்.
 
இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுப்­பயணம் மேற்­கொண்­டுள்ள நியூ­ஸி­லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட இரு­பது–-20 தொடரின் முதலாவது போட்டி இன்று பல்லேகலயில் நடைபெறவுள்­ளது.
 
இந்­நி­லையில், இத்­தொ­ட­ருக்­கான 15 பேர் கொண்ட இலங்கைக் குழாம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தினேஷ் சந்­திமால் தலை­மையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இவ்­வ­ணியில் நடை­பெற்று முடிந்த நியூ­ஸி­லாந்­து­ட­னான ஒருநாள் தொடரில் இடம் பெற்­றி­ருந்த திமுத் கரு­ணா­ரத்ன, ரங்­கன ஹேரத், அஷன் பிரி­யஞ்சன் ஆகிய மூவ­ருக்கும் வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.
 
அதே­வேளை, றமித் றம்­புக்­வெல்ல, சீக்­குகே பிர­சன்ன ஆகியோர் இக்­கு­ழாமில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். அண்­மைக்­கா­ல­மாக இரு­வரும் சிறப்­பான திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யி­லேயே இரு­வ­ருக்கும் இடம் கிடைத்­துள்­ளது.
 
இதனி­டையே அண்­மைக்­கா­லத்தில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்­களில் இலங்கை அணி தனது சிரேஷ்ட வீரர்­க­ளுக்கு சுழற்சி அடிப்­ப­டையில் ஓய்­வினை வழங்கி வந்த போதிலும், குமார் சங்­கக்­கார, மஹேல ஜெய­வர்­தன, தில­க­ரட்ண டில்ஷான் ஆகிய மூவரும் இக்­கு­ழாமில் இடம் பிடித்­துள்­ளனர்.
 
 
தினேஷ் சந்­திமால், குமார் சங்­கக்­கார, லசித் மலிங்க, மஹேல ஜெய­வர்­தன, தில­க­ரட்ண டில்ஷான், குசால் ஜனித் பெரேரா, அஞ்­சலோ மத்தியூஸ், லஹிரு திரிமன்ன, சசித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ், சீக்குகே பிரசன்ன, றமித் றம்புக்வெல்ல, சுரங்க லக்மால், திஸர பெரேரா, நுவான் குலசேகர.

Post a Comment

0 Comments