Subscribe Us

header ads

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடுவதற்கு திட்டம்

சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூடப்­பட்டு சில நாட்­க­ளுக்குள் 90,000 மெற்­றிக்தொன் மசகு எண்ணெய் கப்­ப­லொன்று திடீ­ரென இங்கு வந்­துள்­ள­மை­யா­னது பல்­வேறு சந்­தே­கங்­களை கிளப்­பி­யுள்­ள­தாக இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பன பொது ஊழியர் சங்கத் தலைவர் அசோக ரங்­வல தெரி­வித்­துள்ளார்.
 
சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை நிரந்­த­ர­மாக மூடி விடு­வ­தற்கு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குற்றம் சாட்­டினார்.
இது தொடர்­பாக அசோக ரங்­வல மேலும் தெரி­விக்­கையில்,
 
மசகு எண்ணெய் ஏற்­றிக்­கொண்டு கப்­ப­லொன்று வரு­வ­தென்றால் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் எஞ்­சி­யி­ருந்த எண்ணெய் மூலம் சில நாட்கள் நிலை­யத்தை இயங்கச் செய்­தி­ருக்­கலாம்.
 
ஆனால் கப்பல் வரு­வதை வெளிப்­ப­டுத்­தாது சுத்­தி­க­ரிப்பு நிலையம் இழுத்து மூடப்­பட்­டது. யாரது தேவைக்­காக என்­பது புரி­ய­வில்லை.
 
அத்­தோடு திடீ­ரென 90,000 மெற்றிக் தொன் மசகு எண்­ணெ­யுடன் கப்­ப­லொன்று வந்­துள்­ளமை பல்­வேறு சந்­தே­கங்­களை கிளப்­பி­யுள்­ளது.
 
சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூடப்­படும் வரை கப்பல் வரு­வது ஏன் மறைக்­கப்­பட்­டது? திடீ­ரென மசகு எண்ணெய் கப்பல் எப்­படி வந்­தது? இதற்­கான கோரிக்கை எப்­போது விடுக்­கப்­பட்­டது.? கப்பல் வரு­வது தெரிந்­தி­ருந்தால் ஏன் நிலையம் மூடப்­பட்­டது. இதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? மசகு எண்ணெய் கொண்டு வரு­வதால் நாட்­டுக்கு லாபம் கிடைக்­கி­றது.
 
நேர­டி­யாக சுத்­தி­க­ரித்த எண்ணெய் கொண்டு வரு­வ­தற்கு அதிக செல­வாகும். அத்­தோடு நாட்­டுக்கும் நஷ்டம்.
எனவே, திட்­ட­மிட்டு மசகு எண்ணெய் கொண்­டு­வ­ரு­வதை நிறுத்தி சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை மூடி விட்டு சுத்­தி­க­ரித்த எண்ணெய் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
 
இதன் மூலம் கமிஷன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காகவே திட்டமிட்டு சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அசோக ரங்கல தெரிவித்தார்.

Post a Comment

0 Comments