Subscribe Us

header ads

நாணயக் குற்­றி­களை பயன்­ப­டுத்த கோரிக்கை

நாணயக் குற்­றி­களைப் பயன்­ப­டுத்­து­மாறு இலங்கை மத்­திய வங்கி மக்­களைக் கோரி­யுள்­ளது.
 
இது குறித்து இலங்கை மத்­திய வங்கி விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,
 
இலங்­கையில் 20.6 மில்­லியன் மக்கள் உள்­ளனர். இவர்­களில் நாணயக் குற்­றிகள் பயன்­பாட்­டுக்­காக 15 கோடியே 74 இலட்­சத்து 45 ஆயி­ரத்து 382 பத்து ரூபா நாணயக் குற்­றி­களும் 60 கோடி 43 இலட்­சத்து 67 ஆயி­ரத்து 758 ஐந்து ரூபாய் நாணயக் குற்­றி­களும் 50 கோடி 33 இலட்­சத்து 68 ஆயி­ரத்து 315 இரண்டு ரூபாய் நாண­யக்­குற்­றி­களும் புழக்­கத்தில் விடப்­பட்­டுள்­ளன.
 
அத்­துடன், 71 கோடியே 13 இலட்­சத்து 34 ஆயி­ரத்து 933 ஒரு ரூபாய் நாண­யக்­குற்­றி­களும் 37 கோடி 14 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 434 ஐம்­பது சத நாணயக் குற்­றி­களும் மக்­களின் பாவ­னைக்­காக புழக்­கத்தில் விடப்­பட்­டுள்­ளன.
 
இருப்­பினும், இந்­நா­ண­யக்­குற்­றி­களை மக்கள் பயன்­ப­டுத்­தாது சேமித்து வரு­கின்­றனர். இதனால் நாண­யக்­குற்­றி­களை பாவ­னைக்கு பயன்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.
 
இவற்றைக் கருத்­திற்­கொண்டு தங்­க­ளி­ட­முள்ள நாண­யக்­குற்­றி­களை பயன்­ப­டுத்­து­மாறு அவ்­வ­றிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments