Subscribe Us

கொழும்பு பேர ஏரியில் 30 வருடங்களாக மீன் பிடிக்கும் இம்தியாஸ்

(சிலாபம் திண்­ண­னூரான்)

பலர் நாள்­தோறும் உணவில் மீனை இணைத்துக் கொள்­கின்­றனர். ஆனால் மீனவ சமூ­கத்தின் அவ­லத்தை எவரும் வெளி உல­குக்கு கொண்டு வரு­வ­தில்லை. இது மீனவ சமூ­கத்தின் குற்­றச்­சாட்டு.


இன்று எம்­மோடு இணைத்துக் கொள்­பவர் ஒரு வித்­தி­யா­ச­மான வகையில்  மீனவத் தொழிலை மேற்­கொள்ளும் மீன வர். இவர் தனது மீனவத் தொழிலை கட­லிலோ அல்­லது குளத்­திலோ மேற்­கொள்­பவர் அல்ல. இவர் கொழும்பு–2 கொம்­ப­னித்­தெரு பகு­தியில் சிற்­றம்­பலம் கார்­டினர் மாவத்­தையை ஊடு­ருவி செல்லும் ஏரி­யி­லேயே கடந்த முப்­பது வரு­டங்­க­ளா தனது மீனவ தொழிலை மேற்­கொண்டு வரு­கின்றார்.





தெமட்­ட­கொ­டையைச் சேர்ந்த 42 வய­தான எம். இம்­தியாஸ் யூசுப் எனும் இம் மீனவர் இரண்டு குழந்­தை­களின் தந்­தை­யாவார்.  இம்­தியாஸ் யூசுப்பின் மீனவத் தொழில் மிகவும் விசித்­தி­ர­மா­னது.


இம்­தியாஸ் மீன்­பி­டிக்கும் ஏரி­யா­னது கொழும்பு நகரின் பல பிர­தே­சங்­க­ளுக்­குள்ளும் நுழைந்து பின்னர் பழைய நாடா­ளு­மன்­றத்­தோடு இணைந்த பிர­தே­சத்­தையும் கடந்து இறு­தி­யாக காலி­மு­கத்­திடல் கட­லுக்குள் சங்­க­மிக்­கின்­றது. இது போர்த்­துக்­கீசர் காலத்­துக்கு முன் மன்­னர்­களின் ஆட்­சிக்­கா­லத்து ஏரி என வர­லாற்று நூல்கள் தெரி­விக்­கின்­றன.


 இவ் ஏரியே போர்த்­துக்­கீ­சரின் ஆட்­சியில் ஒல்­லாந்தர் கோட்­டையைக் கைப்­பற்ற இய­லாத வகையில் போர்த்­துக்­கீ­சரின் பெரும் காவல் அர­ணா­கவும் திகழ்ந்­தது. இந்த ஏரி ''பேர ஏரி" என அன்றும் இன்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது.


இந்த ஏரியில் இம்­தியாஸ் வலை வீசி மீன்­பி­டிப்­பதை சேர். சிற்­றம்­பலம் கார்­டினர் மாவத்தை பாலத்தின் மீதி­ருந்த மக்கள் கூட்­டமாய் கூடி ரசிப்­பார்கள். மழை­யையும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது இவர் இவ் ஏரியல் மீன்­பிடி தொழிலை மேற்­கொள்­கிறார். இவ­ருடன் இணைந்து மேலும் எட்­டுக்கும் மேற்­பட்டோர் இந்த  ஏரியில் தங்கள் தொழிலை நாள்­தோறும் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.




“நான் போயா தினத்தை தவிர்ந்த ஏனைய நாட்­களில் மீன்­களை பிடித்து வரு­கின்றேன். நானும் எனது நண்­பர்­களும் வலை வீசி நுட்­ப­மாக மீன்­பிடிப்பதை மக்கள் ஆவலாய் பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்ப்­பார்கள். வெளி­நாட்டைச் சேர்ந்த உல்­லாசப் பய­ணி­களின் பார்­வை­யிலும் நாங்கள் விழுந்­து­வி­டுவோம். எங்­களை அவர்கள் விநோ­த­மாக பார்ப்­பார்கள். படம் பிடிப்­பார்கள். வீடியோ கெமரா மூலம் வீடியோ பதிவை மேற்­கொள்­வார்கள். முப்­பது வரு­ட­மாக இந்த ஏரியே என்னை வாழ வைக்­கின்­றது” என்­கிறார் இம்­தியாஸ் யூஸுப்.


“எனது அனைத்து ஆவ­ணங்­க­ளிலும் தொழில் மீனவர் என்றே பதிந்­துள்ளேன். எனக்கு ஏனைய எவ்­வித தொழிலும் தெரி­யாது. தினமும் குறைந்­தது பத்து கிலோ மீன்­க­ளையே பிடிக்க இயலும். சில நாட்­களில் இதுவும் கிடைக்­காது போய்­விடும். இத்­தொ­ழிலின் மூல­மாக கிடைக்கும் வரு­வாயின் மூல­மா­கவே எனது குடும்­பத்தை வாழ வைக்­கின்றேன்.


பாலத்­தி­லி­ருந்து மக்கள் எங்­களை விநோ­த­மாக பார்­வை­யி­டு­வார்கள். இந்த ஏரியில் மீன் பிடித்து சீவியம் மேற்­கொள்ளும் நாங்கள் பல்­வேறு இன்­னல்­க­ளையும் இத் தொழிலில் தொட்டுப் பார்த்­துள்ளோம். இவ் ஏரியைச் சுற்­றி­வர வங்­கிகள், அரச நிறு­வ­னங்கள், இரா­ணுவ முகாம் என அனைத்தும் இணைந்து இருப்­பதால் சில நாட்­களில்  பாது­காப்பு கார­ணத்­திற்­காக படை­யி­னரால் மீன் பிடிக்க தடை விதிக்­கப்­படும். அன்­றைய தினம் எங்­க­ளுக்கு கறுப்புத் தின­மாக மாறி­விடும்.


யுத்த காலத்தில் பெரும் சிர­மப்­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. கொழும்பில் எங்­கா­வது குண்டு வெடித்­தாலோ அல்­லது வேறு சம்­ப­வங்கள் அக்­கா­லத்தில் இடம்­பெற்றால் எங்கள் தொழிலும் பாதிக்­கப்­படும்” என்றார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

“யுத்த காலத்தில் இப்­ப­குதி அதி பாது­காப்பு வலை­ய­மாக இருந்­தது. இதனால்
இடை­யி­டையே பாது­காப்பு கார­ணத்­திற்­காக மீன்­பி­டிக்கத் தடை செய்­யப்­பட்­டது. யுத்தம் இறு­தி­கட்­டத்தை எட்­டிய தரு­ணத்தில் 2009 ஆம் ஆண்டில் இவ் ஏரியில் மீன்­பி­டித்­த­மைக்­காக கொம்­பனித் தெரு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு ஒரு நாள் பொலிஸ் பாது­காப்பில் நிறுத்­தப்­பட்டேன்.

 மறுநாள் கோட்டை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு 5000 ரூபாய் அப­ராதம்
விதிக்­கப்­பட்டேன்.  பிடிக்­கப்­பட்ட மீன்கள் உயி­ரோடு வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
நீதி­மன்­றத்தின் உத்­த­ரவின் கீழ் மீண்டும் அம்­மீன்கள் ஏரியில் விடப்­பட்­டன.


மழை அதி­க­மாக பெய்யும் காலத்தில் ஏரியில் பாசி படிந்து நீர் பச்சை நிற­மாக
மாறி­விடும். இது மீன­வர்­க­ளான எங்­க­ளுக்கு பெரும் தொல்­லை­யாகும். பாசி
படர்ந்­தி­ருப்­ப­தினால் வலையை நீரில் போட இய­லாது. நாங்­களே இப்­பா­சியை பெரும் சிர­மத்­தோடு அகற்­றுவோம். அத்­தோடு ஜப்பான் பஜ்­ஜிரி எனப்­படும் நீர்த்­தா­வ­ரமும் மழை­யோடு வளர்ந்து ஏரியை முற்­றாக மறைத்­து­விடும். இத்­தா­வரம் போர்த்­துக்­கீ­சரால் இந்­நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நீர் தாவரம், ஒல்­லாந்­த­ரி­ட­மி­ருந்து கோட்டைப் பகு­தியைக் காப்­பாற்ற ஏரியில் வளர்க்­கப்­பட்ட தாவ­ர­மாகும். இதையும் நாங்­களே சுத்தம் செய்வோம். வெளி­நாட்டு அரச தலை­வர்கள் இந்­நாட்­டுக்கு வருகைத் தந்து இவ் வீதியால் பய­ணிக்­கையில் பாது­காப்புக் கார­ணத்­திற்­காக எங்­க­ளுக்கு பாது­காப்புப் பிரி­வி­னரால் தடை விதிக்­கப்­படும். அவ் வாக­னங்கள் இவ் வீதியை கடந்த பின்னர் மீண்டும் தொழிலில் இறங்க அனு­ம­திக்­கப்­ப­டுவோம்.

நாங்கள் வலை வீசியே மீன்­களைப் பிடிப்போம். வலையில் சிறிய மீன்­களும், குஞ்­சு­களும் அகப்­பட்டுக் கொள்ளும். அவை­களை ஏரி தண்­ணீரில் விட்டு விடுவோம். இது எங்­களின் மீனவ தொழிலின் தர்­ம­மாகும். பெரிய மீன்­களை வலை­யி­லி­ருந்து எடுத்து ஏரி நீரில்ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­டுள்ள வலை கூட்­டுக்குள் போட்டு வைத்து விடுவோம். நீரில் நான்கு தடி­களை நாட்டி வலை­யினால் இக்­கூடு அமைக்­கப்­படும். இக்­கூட்­டுக்­குள்­ளேயே பெரிய மீன்­களை சேக­ரித்து அனைத்து வேலை­க­ளையும் முடித்த பின்னர் வெளியே எடுத்து கூடை­களில் வைத்து விற்­ப­னைக்கு எடுத்துச் செல்வோம். இன்று உயி­ரோடு உடல் சூட்­டோடு இருக்கும் மீன்­க­ளையே நுகர்வோர் விரும்­பு­கின்­றனர்” என்­கிறார் இம்­தியாஸ்.


“காலை 9 மணி முதல் பிற்­பகல் 2 மணி­வரை பிடிக்­கப்­படும் மீன்­களை நான் தெமட்­ட­கொடைப் பிர­தே­சத்தில் விற்­பனை செய்வேன். இரவு10 மணி முதல் மறுநாள் விடிய 2 மணி­வரை பிடிக்­கப்­படும் மீன்­களை விடி­யற்­கா­லையில் பேலி­யா­கொடை மீன் சந்­தையில் விற்­பனை செய்வேன். சில நேரங்­களில் சில ஹோட்டல் உரி­மை­யா­ளர்கள் ஏரியில் வைத்தே அதி­கா­லையில் கொள்­முதல்  செய்வர். இவ் ஏரியில் இரவு வேளையிலேயே நிறைய மீன்கள் வலையில் சிக்குப்படும். இந்த ஏரியில் “பட்டோ” எனக் கூறப்படும் மீன் இனமே காணப்படுகின்றது. இம்மீனுக்கு நல்லதோர் சந்தை வாய்ப்பு உள்ளது.


1980 களில் இவ் ஏரி தண்ணீரை குடித் தோம். இவ் ஏரியில் குளித்தோம். இன்று இவ் ஏறியின் சுற்றாடல் மாசடைந்து விட் டது.  ஏரியின் அனைத்து பகுதிகளிலும் நிறு வனங்கள் எழும்பிவிட்டன. இந் நிறுவன கழிவு நீர் இந்த ஏரியிலேயே விடப் படுகிறது” என்றார் இம்தியாஸ் கவலை யோடு.
     

Post a Comment

0 Comments