Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று நவம்பர் 19

1969: பேலே தனது 1,000ஆவது கோலை அடித்தார்.

2005: இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

1794 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்­சி­னை­களைத் தீர்க்கும் பொருட்டு ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் பிரித்­தா­னி­யா­வுக்கும் இடையில் உடன்­பாடு எட்டப்­பட்­டது.
 
1816 : போலந்தின் வோர்சா பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட்­டது.
 
1881 : உக்­ரேனில் ஒடிசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்­தது.
 
1932 : சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்­டா­வது மனைவி தனது வீட்டில் மர்­ம­மான   முறையில் இறந்து கிடக்கக் காணப்­பட்டார்.
 
1941 : இரண்டாம் உலகப் போர்: மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஜேர்மன்,
அவுஸ்­தி­ரே­லிய  போர்க்­கப்­பல்­க­ளுக்­கி­டையில் நிகழ்ந்த மோதலில் இரு கப்­பல்­களும் மூழ்­கின. இதில் 645 அவுஸ்­தி­ரே­லியக் கடற்­ப­டை­யி­னரும் 77 நாசி ஜேர்­ம­னியக் கடற்­ப­டை­யி­னரும் கொல்­லப்­பட்­டனர்.
 
1942 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்­கிராட் சண்டை - சோவியத் படை­யினர் ஸ்டாலின்­கிராட் நகர் மீது மீள் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர். இது பின்னர் அவர்­க­ளுக்கு வெற்­றியை அளித்­தது.
 
1946 : ஆப்­கா­னிஸ்தான், ஐஸ்­லாந்து, சுவீடன் ஆகி­யன ஐ.நாவில் இணைந்­தன.
 
1969 : அப்­போலோ 12 விண்­க­லத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்­தி­ரனில் இறங்கி நடந்த மூன்­றா­வதுஇ நான்­கா­வது மனி­தர்கள் என்ற பெய­ரினைப் பெற்­றனர்.
 
1969 : பிரேஸில் கால்­பந்­தாட்ட வீரர் பேலே தனது 1,000ஆவது கோலை
 
அடித்தார்.
1977 : எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத் சமாதானப் பேச்­சுக்­க­ளுக்­காக இஸ்ரேல் சென்­ற­டைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
 
1977 : போர்த்­துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில்
விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 130 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
1979: அமெ­ரிக்க பண­யக்­கை­தி­களில் 13 பெண்கள் மற்றும் கறுப்­பி­னத்­த­வர்­களை
விடு­தலை செய்­யு­மாறு ஈரா­ னிய ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா கொமேனி
உத்­த­ர­விட்­டார். 
 
1984 :மெக்ஸிக்கோ நகரில் எண்­ணெய்க்­கு ­தங்­களில் ஏற்­பட்ட பெரும் வெடிப்­பு­க­ளினால் ஏற்­பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
1985 : பனிப்போர் காலத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி ரொனால்ட் றீகன், சோவியத் ஜனா­தி­ப­தி மிக்கைல் கொர்­பச்சோவ் இரு­வரும் ஜெனீ­வாவில் முதன் முறை­யாகச் சந்­தித்­தனர்.
 
1998: மோனிகா லுவின்ஸ்கி விவ­காரம் தொடர்­பாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில்
கிளின்­ட­னுக்கு எதி­ராக அந்­நாட்டு நாடா­ளு­மன்றக் குழு குற்­ற­வியல் பிரே­ரணை விசா­ர­ணையை ஆரம்­பித்­தது.
 
1999 :மக்கள் சீனக் குடி­ய­ரசு தனது முத­லா­வது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
 
2005 : இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.
 
2010: நியூஸிலாந்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தினால் 29 பேர் பலியாகினர்.

Post a Comment

0 Comments