1421 : நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1477 : இங்கிலாந்தில் அச்சியந்திரசாலை யில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான
'Dictes or Sayengis of the Philosophres' வில்லியம் கக்ஸ்டன் என்பவரால்
வெளியிடப்பட்டது.
1493 : கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோவை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1626 : புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1803 : ஹெயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது ஹெயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழி வகுத்தது.
1863: டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென் மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார். இது
1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1883 : கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 : பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1909 : நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள்
அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு
போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1926 : ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்பிரட் நோபல், டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்பதே இதற்குக் காரணம்.
1929 : அத்திலாந்திக் சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம் மற்றும்
சுனாமி காரணமாகப் பலத்த சேதம் ஏற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
1943: இரண்டாம் உலகப்போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப் பட்டன.
1943 : உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள், நாசிப்படைகளினால் கொல்லப்பட்டனர்.
1947 : நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
1963: இலக்கங்களை சுழற்றுவதற்குப் பதிலாக அழுத்தி செயற்படவைக்கும்
தொலைபேசி பாவனைக்கு வந்தது.
1978 : கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் ஆலயத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வு களில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 : லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
1993: தென்னாபிரிக்காவில் கறுப்பினத்த வர்களுக்கு வாக்குரிமையளிக்கும்
புதிய அரசியலமைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் அங்கீகாரம் அளித்தன.
2003: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்
துக்கு தடைவிதிப்பது அரசியலமைப்பு க்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டது.
1477 : இங்கிலாந்தில் அச்சியந்திரசாலை யில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான
'Dictes or Sayengis of the Philosophres' வில்லியம் கக்ஸ்டன் என்பவரால்
வெளியிடப்பட்டது.
1493 : கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோவை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1626 : புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1803 : ஹெயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது ஹெயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழி வகுத்தது.
1863: டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென் மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டார். இது
1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1883 : கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 : பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1909 : நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள்
அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு
போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1926 : ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார். நோபல் பரிசு ஸ்தாபகர் அல்பிரட் நோபல், டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்பதே இதற்குக் காரணம்.
1929 : அத்திலாந்திக் சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.2 ரிச்டர் பூகம்பம் மற்றும்
சுனாமி காரணமாகப் பலத்த சேதம் ஏற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
1943: இரண்டாம் உலகப்போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப் பட்டன.
1943 : உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள், நாசிப்படைகளினால் கொல்லப்பட்டனர்.
1947 : நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
1963: இலக்கங்களை சுழற்றுவதற்குப் பதிலாக அழுத்தி செயற்படவைக்கும்
தொலைபேசி பாவனைக்கு வந்தது.
1978 : கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் ஆலயத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வு களில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 : லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
1993: தென்னாபிரிக்காவில் கறுப்பினத்த வர்களுக்கு வாக்குரிமையளிக்கும்
புதிய அரசியலமைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் அங்கீகாரம் அளித்தன.
2003: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்
துக்கு தடைவிதிப்பது அரசியலமைப்பு க்கு முரணானது என மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அமெரிக்காவில் முதல் தடவையாக மசாசூட்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டது.
0 Comments