Subscribe Us

header ads

புத்தளம் மன்னார் (A32) பாதை திறக்கப்பட வேண்டும். (Clean Nation Movement)

 


புத்தளம் மன்னார் (A32) பாதை திறக்கப்பட வேண்டும்.

புத்தளத்தில் இருந்து  மன்னாருக்கு  செல்லக்கூடிய (A32) பாதை 1988 ஆம் ஆண்டு அப் பதையினால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்ற காரணதிற்காக அரசாங்கத்தினால் மூடப்பட்டது.

மீண்டும் 2010 ம் ஆண்டு யுத்தம் முடிந்த கையோடு இப்பாதை திறக்கப்படுகின்றது. மீள் குடியேற்றத்திற்காக காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் சுமார் 250 KM க்கும் அதிகமான தூரம் பயணித்து மன்னாருக்கு சென்ற மக்களுக்கு  77 KM பயணம் செய்தால் மன்னாரை அடையக் கூடியதாக இருந்தது.

மக்கள் அப் பாதை புனர்நிர்மாணம் செய்யப்படும் என் பெரிய எதிர்பார்புடன் இருந்த போதும் அப் பாதை மீண்டும் அரசாங்கத்தினால் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் மூடப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

நிச்சயமாக அப் பாதை திறக்கப்பட வேண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் காணப்பட்டாலும் சில அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக றிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், அலி சப்ரி ரஹிம் போன்றவர்கள் அப் பாதையை மையப்படுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது கவலையளிக்கிறது.

நிச்சயமாக மக்களாகிய நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும் எங்களுடைய உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நாங்கள் தூய தேசத்திற்கான இயக்கம் சார்பாக எங்களுடைய நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

உலகில் பல நாடுகளில் பல்வேறு திட்டமிடல்களுடன் வனங்களை ஊடறுத்து செல்லக்கூடிய எத்தனையோ பாதைகள் காணப்படுகின்றன எனவே நீங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நிச்சயமாக இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று சிறுபான்மை கட்சிகளின் பாரளுமன்ற உறுப்பினர்களின் சூழ்ச்சிகளுக்கு அப்பால் இந்த பாதையை புனர்நிர்மாணம் செய்து மக்களின் பாவனைக்காக திறக்க வேண்டும்.

பல மக்களின் கேரிக்கை, போராட்டங்களுக்கு செவிமெடுக்காது சுற்றுச்சூழல் மாசுபடும், யானைகளுக்கு பாதிப்புவரும் என்பதைத் தாண்டி இன்று அறுவைக்காடு குப்பை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனவே கௌரவ ஜனாதிபதியான நீங்கள் இந்த மக்களுக்காக சரியான திட்டங்களை வகுத்து இந்த பாதையை திறந்து தர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொள்கின்றோம்.

தூய தேசத்திற்கான இயக்கம். (Clean Nation Movement)

Post a Comment

0 Comments