பின்வரும் இரண்டு அல்குர்ஆனிய வசனங்கள் இஸ்லாத்தின் பேச்சு நெறியை முழுமையாக வரைந்து காட்டுகின்றன.
'நபியே! உமதிரட்சகனின் பாதை நோக்கி அறிவுபூர்வமாகவும் அழகிய உபதேசம் கொண்டும் அழைப்பு விடுப்பீராக! மேலும் அவர்களுடன் மிக மிக அழகான (வார்த்தை நாகரிக) முறைமைகள் கொண்டு வாதிடுவீராக' (16 : 125)
'நபியே! கூறுங்கள். இதுவே எனது பாதை (இப் பாதையில்) நானும் என்னைப் பின்பற்றியவர்களும் (தூர நோக்கு மிக்க) அகப்பார்வையுடன் அல்லாஹ்வின் பால் அழைக்கின்றோம்...' (12 : 106)
1. அறிவுபூர்வமான அழைப்பு (ஹிக்மா)
2. அழகிய உபதேசம் (அல்மவ்இழதுல் ஹஸனா)
3. மிக அழகான வார்த்தை நாகரிகம் (பில்லதி ஹிய அஹ்ஸன்)
4. அகப்பார்வையோடு கூடிய விளக்கம் (பஸீரத்)
ஆகிய அனைத்தும் உள்ளடங்கலான அழகிய மொழியின் மூலம் அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுப்பதனையே மேற்குறித்த வசனங்கள் விளக்கியிருக்கின்றன.
இவற்றோடு அந்த மொழிக்கு தேவையான மற்றோர் அம்சத்தையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
'நீங்கள் இலகுபடுத்துபவர்களாகவே அனுப்பட்பட்டுள்ளீர்கள் சிரமப்படுத்துபவர்களாக அனுப்பப்படவில்லை...' (அல்புஹாரி)
அதாவது நீங்கள் முன்வைக்கும் மார்க்கம் மக்களை கவரக்கூடியதாகவும் அவர்களது விவகாரங்களை இலகுபடுத்தவதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் அமர்த்தப்பட்டுள்ள பணி மக்களை வெருண்டோட வைப்பதல்ல.
இத்தகைய நோக்கங்கள் அனைத்தையும் அடையும் விதமாகப் பணி செய்வதற்கு பிரதான ஊட்டச்சத்தை வழங்குவதுதான் நாம் பேசும் மொழியாகும். மனிதனைப் படைத்த அவனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்த ரஹ்மான் அந்தப் பேச்சால் அவனது மார்க்கம் அசிங்கப்பட்டுப் போவதை எப்படி விரும்புவான்...?
'தாஇக்களின் அழைப்பு மொழியில் இஸ்லாம்' என்ற நூலிலிருந்து
0 Comments