Subscribe Us

header ads

கல்பிட்டி நகரில் பெண்களுக்கான தனியான பாடசாலை காலத்தின் கட்டாயமாகும்.

 


கற்பிட்டி கல்வி வரலாறு அல் - அக்ஸா தேசிய பாடசாலையோடு இரண்டரக்கலந்த ஒன்றாகும். குறைந்த மாணவர் தொகையோடு புத்தள மாவட்டத்தில் தனக்கென தனியான இடத்தினை கல்வியில் பேணிவந்த பாடசாலை 1990 வடபுல முஸ்லிங்கள் வருகையோடு சடுதியாக உயர்ந்த மாணவர் தொகையினால் மாலை, காலை நேர பாடசாலை என இரண்டாக பிரிந்து நடாத்தப்படுமளவிற்க்கு போதிய கட்டிட வசதிகள் இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் 2000 ஆண்டுக்குப்பின்னர் மாலை நேர பாடசாலை நிறுத்தப்பட்டு காலை நேர தனிப்பாடசாலையா க 2000 ற்க்கும் மேற்பட்ட மாணவர்களோடு தனது பயணத்தை இன்றுவரை தொடர்கிறது.

ஆரம்பத்தில் மாணவர்கள் தொகை பெரியளவில் காணப்படாத காரணத்தில் முன்னோர்கள் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியான பாடசாலை உருவாக்க நினைக்க வில்லை என்றாலுல் பின்வரும் காரணங்கள் மகளிர் பாடசாலை ஒன்றின் தேவையினை இன்று வேண்டி நிற்க்கின்றது.

1. இஸ்லாம் ஆண் பெண் கலப்பினை விரும்பவில்லை என்ற காரணத்தில் இஸ்லாம் விரும்பாத செயல் ஒன்றை செய்துகொண்டு அதிலிருந்து நலவை எதிர்ப்பார்பது எவ்வகை சாத்தியம்?

2. போட்டி - ஏனைய நகரங்களில் பொதுவாக ஆண்கள் பாடசாலைகளுக்கும் பெண்கள் பாடசாலைகளுக்கும் போட்டித்தன்மை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது( புத்தளத்தில் ஸாஹிரா Vs பாத்திமா மகளிர்,கல்முனையில் ஸாஹிரா Vs கல்முனை பாலிகா, மன்னாரில் சென் சேவியர்ஸ் ஆண்கள் பாடசாலை Vs சென் சேவியர்ஸ் பெண்கள் பாடசாலை யாழ்ப்பானத்தில் வேம்படி மகளிர் Vs யாழ்ப்பான மத்திய கல்லூரி) இவ்வாறனதொரு போட்டிச்சூழலை இங்கு உருவாக்க மகளிர் வித்தியாலயம் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.

3.நிர்வாக இலகுத்தன்மை- 2000-2500 ற்கு உட்பட்ட மாணவர்களை அதிலும் ஆண், பெண் பிரிவு ஆரம்ப பிரிவு அனைத்து பிரிவுகளையும் குறித்த ஒரு நிர்வாகத்தால் கொண்டு நடாத்துவது இக்கால கட்டத்தில் இயலாத காரணத்தால் ஆரம்ப பிரிவு வேறொரு நிர்வாகத்தாலும் பெண்கள் பாடசாலை வேறொரு அதிபராலும் ஆண்கள் பாடசாலை வேறொரு அதிபரது தலைமையின் கீழ் கொண்டுவரப்படும் போது நிர்வாக இலகுத்தன்மையோடு சேர்த்து போட்டிச் சூழலும் உருவாக வாய்ப்பாக அமையும்.

4.ஒழுக்க சீரழிவை கட்டுப்படுத்த ஒரே வழி- ஆண் மாணவர்களது ஒழுக்கம் தொடர்பான விமர்சனங்கள் வெளியில் வந்தாலும் பெண் மாணவியரின் ஒழுக்க பிரள்வான சம்பவங்களும் பதிவாகாமல் இருப்பதில்லை. எனவே ஆண் பாடசாலை வேறாக இயங்குகின்ற போது ஆண்,பெண் மாணவர்கள் இணைந்து செய்யப்படுகின்ற ஒழுக்கபிறள்வான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும் தனித்தனியான ஒழுக்க கோவையினை பின்பற்ற வாய்ப்பாக அமையும்.

5. போட்டி போட அருகில் இரண்டாம் பிரிவு(Secondary) சிறப்பாக இயங்குகின்ற பாடசாலை ஒன்று இல்லை என்ற காரணத்தை சொல்லிக்கொண்டிருக்காமல் பெண்கள் பாடசாலையினை ஆரம்பிக்கும் போது சிறந்த போட்டித்தன்மையுடன் கூடிய பாடசாலைகள் எமது நகரில் காணப்படும்போது பெறுபேறுகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போட்டித்தன்மை உருவாகும். பெண் மாணவியரின் சாதாரண தர உயர்தர சிறந்த பெறுபேறுகளை வைத்து ஆண் மாணவர்களின் குறைவான பெறுபேறுகளை மறைக்கின்ற பாடசாலையின் அவலத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

6. ஆசிரியர்களது செயற்திறனான சேவையை அதிகரிக்க வாய்பேட்படும்- இன்று ஆண் மாணவர்களது கல்வி அதளபாதாளத்தில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆண்கள் பாடசாலை தனியாக இயங்கும் போது எப்பாடு பட்டேனும் சிறந்த பெறுபேற்றை உயர் மட்டத்திற்க்கு காட்ட வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் உள்ளாகின்ற போது கடுமையாக உழைக்க நேரிடும். வளமையினை விட ஆண் மாணவரது கல்வி மட்டம் உயர வாய்ப்பாக அமையும்.

8.ஆண்கள் பாடசாலை தனியாக இயங்கும் போது ஆண் ஆசிரியர்கள் அதிகமாக இணைக்கப்பட வாய்ப்பாக அமைவதனால் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை ஆண் ஆசிரியர்களை கொண்டு பெற முடியும்.

இது போன்று இன்னும் ஏராளமான காரணங்களை அடுக்கிக்கொண்டே போக முடியும்.
எனவே கல்வி, ஒழுக்க விருத்தி என பேசுகின்றவர்கள் பள்ளி நிர்வாகங்கள்,உலமாக்கள் புத்தி ஜீவிகள்,அரசியல்வாதிகள் இது தொடர்பாக கரிசினை செலுத்துமாறு வேண்டிக் கொள்வதோடு மாகாண சபைக்கு கீழால் பெண்கள் பாடசாலையினை அமைப்பதற்க்கான நகர்வினை முன்னெடுக்க வேண்டும்.

அல் அக்ஸா பாடசாலையில் தேவையான பௌதீக,ஆசிரிய வளங்கள் காணப்படுவதனால் பாடசாலையினை இரண்டாக பிரித்து தனித்தனி பாடசாலையாக உருவாக்கு தென்பது இலகுவான காரியமாகும்.

இஸ்லாம் அனைத்து அம்சங்களுக்கும் தீர்வினை சொல்லுகின்ற போது வெறும் கதிரை மாற்றத்திலும் பதவி நிலைகளில் உள்ளவர்களை மாற்றுவதினால் மாற்றம் எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்திப்போம்.

இவன் சிபாஸ் நசார்

Post a Comment

0 Comments