நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுகள் செயலாளர் பிலின்கன் துருக்கியிற்கு விஜயம் செய்து அதன் வெளியுறவுகள் அமைச்சர் ஹகம் பைதான் அவர்களை சந்தித்த போது மூன்று மணிநேர சூடான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
வரையறையற்ற ஆதரவை இராணுவ உதவிகளை அமெரிக்கா இஸ்ரேலிற்கு வழங்குவதோடு மத்தியதரைக்கடலுக்கு இராணுவத்தை யுத்த தாங்கி கப்பல்களை அனுப்பியுள்மையால் அமெரிக்காவும் இஸ்ரேலிய அடாத்தான போர்குற்றங்கள் கூட்டு மனித படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய பங்காளி என்றும்..
இந்நிலை தொடருமாயின் துருக்கி அமெரிக்க உறவு மட்டுமன்றி முஸ்லிம் உலக அமெரிக்க உறவுகளிலும் நிலையான விரிசல் ஏற்படும் என்றும்..
யுத்த நிறுத்தமொன்றை அமெரிக்கா வலியுறத்திய போதும் இஸ்ரேல் பிரதமர் நெடன்யாஹு பிடிவாதமாக மறுப்பதாக பிலின்கன் கூறுவதை தாம் நம்புவதில்லை என வும்..
ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தொடர்ந்தும் கருதினால் தம்மால் எந்த சமாதான முன்னெடுப்பையும் மேற்கொள்ள முடியாது என்றும்..
பிராந்தியத்தில் போர் விஸ்தீரனமாவதை தடுக்க அமெரிக்கா விரும்பினால் இஸ்ரேல் தற்காலிக மோதல் தவிர்ப்பை அன்றி முழுமையான யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும்..
மனிதபிமான உதவிகள் உணவு குடிநீர் மருந்து வகைகள், எரிபொருள் உட்டபட அத்தியாவஷ்ய பண்டங்கள் சேவைகளுக்காக காஸாவின் எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என்றும் ..
காட்டமாகவே தெரிவித்துள்ளதோடு புதிதாக தெரிவிப்பதற்கு எதுவும் இல்லாததால் இருவருமாக மேற்கொள்ளும் மரபு ரீதியிலான ஊடக சந்திப்பு அவசியமற்றது என்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் பைதான் பிலின்கனிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு உங்களை சந்திக்கும் ஒரே காரணத்தால் துருக்கி மக்கள் சினமடைந்திருப்பதாகவும் தமது அரசின் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் உறுப்பு நாடு என்ற வகையிலும் ஐரோப்பிய அட்லாண்டிய பாதுகாப்பு கூட்டின் உறுப்பு நாடு என்ற வகையிலும் மற்றும் பல பிராந்திய விடயங்களில் நேடோவில் ஒத்துழைப்பு நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியுள்ளதாலும் காஸா விவகாரத்தில் சினம் கொண்டுள்ள துருக்கியை அமைதிப்படுத்தவே பிலின்கன் அங்கு சென்றதாக தெரிவிக்கப் படுகிறது.
வெளிவிவகார செயலாளர் என்றவகையில் மரபு ரீதியாக வெளியுறவு அமைச்சரை மாத்திரமே சந்திக்க முடியும் என்றும் ஜனாதிபதி அர்டோகானை சந்திக்க முடியாதெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments