பொதுவாக மத்திய கிழக்கில் இந்தியர்கள் அதிகம். அதில் மலையாளிகள்தான் பெரும்பாண்மையினர். இங்கு மலையாளி இல்லாத கம்பனியைக் காணுவது மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மலையாளிகள் நிறைந்து போய் இருக்கின்றனர். பல கம்பனிகளில் அவர்கள்தான் பெரிய பொசிஷனில் கூட இருப்பார்கள்.
அது மட்டுமல்ல பெரிய ஹைப்பர் மார்க்கட் முதல் சாதாரண
ஹோட்டல்கள் வரைக்கும் மலையாளிகள் சொந்த பிஸ்னஸ் கூட செய்திட்டு
இருக்கின்றார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான
மூன்று காரணத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன் முடியுமென்றால் நம்மளும்
முயற்சிக்கலாம்.
#முதலாவது காரணம் : பெரிய பொசிஷன டார்கட் பண்ணி வேலை செய்தல்.
புதிதாக
வேலைக்கி சேர்பவராக இருந்தாலும் சரி அல்லது வேலை செய்கின்ற பழைய ஒருத்தராக
இருந்தாலும் சரி அவர்கள் அங்க இருக்கின்ற முக்கியமான பொசிஷன டார்கட்
பண்ணித்தான் வேலைக்கி சேர்வாங்களாம். உதாரணமாக எச்.ஆர் , மெனேஜர் போன்ற
Decision Making Processes ல Involve ஆகக் கூடிய பொஷிசன்கள்.
அதே
போல பிஸ்னஸ் செய்ரதாக இருந்தாலும் சொந்தமாகத்தான் பிஸ்னஷும்
ஆரம்பிப்பாங்களாம். சுருக்கமாக சொல்லப் போனா ஒருத்தருக்குக் கீழ இருந்து
வேலை செய்ரதவிட தான் மேல இருந்து தனக்கு கீழ பல பேர் வேலை செய்யோணும் எங்கு
மெண்டலிட்டி.
தற்பொழுது வெளிநாட்டுக்கு வாற வீதம் அதிகம்
என்பதாலும் போதிய தகைமையோட வருவது குறைவு என்பதாலும் எல்லாரும் இந்த
நோக்கத்தில் வருவதில்லையாம். ஆனால் பொஷிசன் பேஸ்ட் மெட்டலிட்டி குறைய
வில்லை.
#இரண்டாவது காரணம் : வேலையை மையப்படுத்திய படிப்பு
வெளிநாட்டு
வேலை வாய்ப்பில் எந்தத் துறைக்கு அதிக மார்க்கட் இருக்கோ அத டார்க்கட்
பண்ணித்தான் அவங்கட உயர் படிப்புக்களும் அமைந்திருக்கின்றது. கூட்டிக்
கழிச்சிப் பாத்தா பெரும்பாலான மலையாளி இந்த மூன்று துறையிலயும்தான்
படிச்சிருப்பாங்க.
1. இன்ஜினியரிங்க் பீல்ட்... அதுலயும் construction இன்ஜினியரிங் மற்றது MEP (Mechanical, Electrical, Plumbing ) இன்ஜினியரிங்.
2.
மெடிகல் பீல்ட்... அதுலயும் டொக்டர், பார்மசி, நேர்சிங்க் இது
மூணுலயும்தான் பெரிதும் கவனம் செலுத்துறாங்க. பொதுவாக மலையாளி பெண்கள்
அதிகம் சொய்ஸ் பண்ணுவது இதைத்தானாம்.
3. IT பீல்ட்...
மத்திய
கிழக்கைப் பொறுத்தமட்டில் இந்த மூன்று துறைக்கு மார்க்கட்டும் அதிகம்,
தொழில் வாய்ப்பும் அதிகம். அதனால அதிகம் அந்த பீல்ட்ட ஜொய்ஸ் பண்ணி
படிச்சிட்டு வாறாங்களாம்.
சில மலயாளிகள் இரிக்கின்றார்கள் இங்கு
வந்தால் கூட உடனே ஜொப் எடுக்கமாட்டார்கள். கொஞ்சக் காலம் இருந்து சிடிவேஷன
நல்லா படிச்சி நல்லா விளங்கிட்டு பொருத்தமான ஒண்டுல இறங்குவாங்க...
#மூன்றாவது காரணம் : மலையாளி என்ற தேச உணர்வு
மலையாளிகளோடு
பழகியவர்களுக்குத் இது தெரிந்திருக்கும். யாரையும் கண்டால் மலையாளியா
என்றுதான் கேட்பார்கள் அவன் ஆம் என்றால் நீ ஹிந்துவா, முஸ்லிமா,
கிறிஸ்டியனா என்றெல்லாம் கேட்பதில்லை. அந்த மலையாளி என்ற தேச உணர்வு
அவர்கள் டெவளப் ஆகுவதற்கும் அவர்களுக்குள் உதவிகள் செய்து கொள்வதற்கும்
பெரும் பங்காற்றுகின்றது.
மலையாளி பெரிய பொஷிசன்ல இரிக்கிர
கொம்பனிக்கி நீங்க இன்டர்விவ்கு போனால் தெரியும் அங்க உங்கள விட
மலையாளிக்கித்தான் முன்னுரிமை கூட இருக்கும். ஒரு கம்பனிக்கி ஒரு மலையாளி
வந்தால் போதும் கொஞ்ச காலத்துல முழுக்க மலையாளி நிறைந்திருப்பார்கள்.
மலையாளி வேலை செய்கின்ற கொம்பனியில் அவுட் சோர்ஸ் பண்ணுகின்ற வேலையைக் கூட மலையாளிக்கித்தான் கொடுப்பார்கள்
மத்திய
கிழக்கில் மலையாளிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதற்கும் மிக முக்கியமான
காரணங்கள்தான் இவை. இது சரியா பிழையா... இது இல்லாமல் அவங்கட நெகடிவ் சைட்
வேற இருக்கலாம். நான் அதைப் பற்றி பேசவில்லை.
இந்த மூன்று
காரணங்களையும் நம்ம நாட்டவர்கள் பின்பற்ற ஏலுமா என்று எனக்குத் தோணவில்லை.
எது எப்படிப் போனாலும் குறைந்தது வெளிநாட்டு வேலைக்குச் செல்கின்ற யோசினை
இருப்பவர்கள் அங்க இருக்கின்ற தொழில் வாய்ப்புக்கள அறிந்து அதுக்கு ஏற்ற
ஒரு படிப்பை படித்துவிட்டு வந்தால் நல்ல தொழிலும் கிடைக்கும் பொஷிசனும்
கிடைக்கும். குடும்பத்தோட செட்டிலும் ஆகேலும்.
இதுவரை இலங்கையர்
குறித்து அரபிகளிடம் ஒரு நல்ல இடம் இருக்கின்றது. அதனை பாழாக்காமல் பணி
செய்வதும் நல்ல பெரிய பொசிஷன்ல இரிக்கிரவங்க இலங்கையருக்கு தொழில் வழங்க
முன்வருவதும் தொழில் தேடி அலையும் இளம் தலைமுறையினருக்கு பெரும் உதவியாக
இருக்கும்.
Sajeer Muhaideen
26/07/2023
0 Comments