வெளிநாட்டிலிருக்கின்ற பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்... எத்தின வருசம் உழைச்சாலும் கடைசில ஒண்டும் மிஞ்சுதில்ல... லட்சக் கணக்குல சம்பளம் எடுத்தும் மாசம் முடியக்க கடன் வாங்குற நிலமைதான்... நாலு வருசமா இருக்கன் எதுக்கு வெளிநாட்டுக்கு வந்தனோ அது ஒண்டும் நடக்கல... இப்படி இன்னும் பல...
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் அதைப் பற்றி நான் இங்க பேசவில்லை. ஆனால் முறையான ஒரு Money மெனேஜ்மன்ட் இருந்தால் இப்புடி பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என்று மட்டும் சொல்ல முடியும். முடிந்தால் நான் இங்கு சொல்கின்ற சில முறைமைகளை அப்ளேய் பண்ணிப் பாருங்கள் ஏதாவது ஒரு மாற்றம் வரலாம் இன்ஷா அல்லாஹ்.
உங்கள் மாதாந்த வருமானத்தை வீட்டுச் செலவு, உங்களது தனிப்பட்ட செலவு, ஸதகா (நன்கொடை), சேவிங்க் என்று நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
1. வீட்டுச் செலவு : தின்னுறது குடிக்கிரது முதல் கரண்ட், தண்ணி பில், ஸ்கூள், வைத்திய செலவுகள் என்று அத்தனையையும் இதில் உள்ளடக்குங்கள். (குடும்பத்தின் மொத்த செலவு)
2. உங்களுடைய தனிப்பட்ட செலவு : உங்களது ரூம் காசி, சாப்பாடு, டெலிபோன் பில் முதற்கொண்டு முடி வெட்டுறது, நாட்டுக்கு போக சாமான்கள் வாங்குறது என்று உங்கள் தேவைகள் அத்தனையையும் இதன் கீழ் கொண்டுவாருங்கள்.
3. ஸதகா (நன்கொடை) : இதில் கல்யாண வீடு, புதுசா புள்ள கிடச்ச வீடு, அன்பளிப்பு, பள்ளி சந்தா, ஸ்கூள் OBA சந்தா, கடன் கொடுத்தல் என்று நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்கின்ற உதவிகள் அனைத்தையும் இதில் உள்ளடக்குங்கள். இதனைத் தனியாக ஒதுக்கி கட்டாயம் செய்து வாருங்கள் அதுதான் மீஸானுல் ஹஸனாத்தில் கனதியானது.
4. சேவிங்க் : இது வீடு கட்டுதல், காணி வாங்குதல், வருமானத்திற்கான ஏற்பாடுகள் என்று உங்களது மேஜர் தேவைக்காக, நீங்கள் வெளிநாடு வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சேவிங்கில் இருக்கட்டும்.
இப்புடி நான்காக பிரித்து உங்களது தேவைகளை வைத்து ஒவ்வொன்றுக்கும் எத்தனை வீதம் அல்லது எவ்வளவு செலவாகும் என்று தீர்மானித்து அதன்கான தொகையை மாதாந்தம் ஒதுக்கிவிடுங்கள்.
நீங்கள் ஒதுக்கிய பணத்தை அந்த மாதத்திற்குள் முழுமையாக செலவளித்து விட வேண்டும் என்று யோசிக்காது தேவையான அளவு செலவு செய்திட்டு மிச்சத்த அப்புடியே வையுங்கள். அடுத்த மாதம் கொங்சம் கூடுதலாகத் தேவைப்பட்டால் அது உதவும்.
நீங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு காசி ஒதுக்குகின்றீர்களோ அதற்குள் மெனேஜ் பண்ண பழகிக்கொள்ளுங்கள். சேவிங்க்ல அல்லது ஸதகால காசி இருக்குதானே என்று அவற்றில் கை வைக்கின்ற பழக்கத்தை முற்றாகத் தவிர்பது நன்று. (இக்கட்டான நிலைமைகளை வைத்து தீர்மானித்துக்கொள்ளுங்கள்)
இத நீங்க சரியாக மெனேஜ் பண்ணி மொனிட்டர் பண்ணுவதற்காக இன்று நிறைய அப் இருக்கின்றது அத போட்டுக்கொண்டால் இத ஈசியா செய்துகொள்ளேலும். கீழே படத்தில் இருப்பது அப்படியொரு அப் தான். அதனை பயன்படுத்தி நண்பர் ஒருவர் தனது மாதாந்த வருமானத்தை மெனேஜ் பண்ணியுள்ள படம்தான் அடுத்தது. இத வைத்து வருட கடைசில மொத்தமாக றிவீவ் பண்ணிகொள்ளவும் ஏலும்.
நீங்க இப்புடி மெனேஜ் பண்ணுற நேரம் நீங்க செய்யக்கூடாத சில விடையங்கள் இருக்கின்றது அதனையும் குறிப்பிடுகின்றேன் அவற்றையும் முயற்சித்துப் பாருங்கள்.
1. இனி வழியே இல்ல கடன் வாங்குவது ஒன்றுதான் வழி என்கின்ற நிலமை வந்தாலே தவிர வேற எதுக்காகவும் கடன் வாங்கிப் பழகாதீர்கள். அது ஒரு போதை பழகினால் விடுபடுவதும் கஷ்டம்.
2. உங்களுக்கு வாங்கிக் கொள்ளக் கஷ்டம், வாங்கினா தரமாட்டார்கள் என்று இருக்கின்றவர்களுக்கு கடன் கொடுப்பதனைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கடன் விடையத்தில் ஜெனிவினாக நடந்துகொள்பவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு தாரளமாகக் கொடுக்கலாம். சிலருக்கு கடன் வாங்குவது ஹொபி அவர்களுக்கு கடன் குடுக்காம இருக்குமட்டும் நல்லம்.
3. உங்களுடைய லெவலில் நின்று ஆசைப்படுவதும் அதற்காக செலவளிப்பதும் தவறில்லை. அடுத்தவனைப் பார்த்து ஆசைப்பட்டு அந்தச் சுமையைச் வீணாகச் சுமக்கத் தேவையில்லை. அந்த லெவலுக்கு நீங்கள் வரும்போது அதனைத் தாராளமாகச் செய்யலாம்.
4. செலவீனத்தை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தவிர்த்துக்கொண்டு வருமானத்தை தரக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக லட்சக் கணக்கு கொடுத்து ஒரு வாகனத்தை வாங்கி வீட்டுல சும்மா வைக்கிரது செலவீனம். ஒரு வாகனத்த வாங்கி வாடகைக்கி விடுவதோ ஒரு காணி வாங்குவதோ அது வருமானத்துக்கான வழி.
5. இலவசங்கள், ஒபர்களுக்கு பின்னால் சென்று தேவைக்கதிகமாக வாங்கி வீட்டையும் ரூமையும் நிரப்பி காசை காலியாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக... பணம் எமது வாழ்க்கைத் தேவைக்கித்தான் பணத்துக்காவே எமது வாழ்க்கை அல்ல என்பதை மனதில் நிறுத்திக்கொள்வது எப்போதும் நல்லதே.
இதனை விட நல்லமுறையில் பணத்தை நிர்வகிக்கின்ற பலர் இருக்கலாம் அவர்களும் தங்களது அனுபவத்தை, ஐடியாக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
Sajeer Muhaideen
02/08/2023
0 Comments