ஏறாவூரில் அகால மரணங்கள் நிகழும் போதெல்லாம் எப்பொழுதும் அங்கே ஒரு பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மௌலானாவிற்கு கோல் எடுத்து சொன்னிங்களா?
இந்த வசனங்களை உச்சரிக்காத அகால மரணங்கள் நடந்த வீடுகளே ஏறாவூரில் இல்லை என்றே கூறுவேன்.
என்ன வேலை என்றாலும் மையத்து விடயத்தில் மௌலானா எப்பொழுதும் முன்னுரிமை அளித்து பணியாற்றியதே அதிகம்.
நான் இவரோடு இருந்த காலங்களில் ஒரு விடயத்தை நினைத்து பல தடவை வியப்புற்றிருக்கிறேன்.
இந்த மனிசனுக்கு இருக்குற தொடர்புகள் (Contacts) வேற யாரிடமும் நான் கண்டதே இல்லை..
ஒரு துணியா தொங்கலில் ஏதோ ஒரு தேவையை நிறைவேற்ற வேண்டுமென இவரிடம் சென்றாலும் அங்குள்ள ஒருவரின் பெயரை சொல்லி அவருக்கு கோல் அடிப்பார் மனிசன்.
நேற்று முன் தினம் மன்னம்பிட்டியவில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை தாமதிக்காது அனைத்து நடைமுறைகளையும் விரைவாக செய்து முடித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நேற்றிலிருந்து முழு மூச்சாக களத்தில் பணியாற்றியிருக்கிறார்.
அல்லாஹ் அவரின் இவ் அமல்களை பொருந்திக் கொள்ள வேண்டும்.
மேலும் யார் யாரெல்லாம் களத்தில் நின்று உதவினார்களோ அவர்களுடைய மேலான சேவைகளுக்கு நன்றிகளும் பிரார்த்தனைகளும்…
0 Comments