Subscribe Us

header ads

விரைவில் ராஜபக்சர்களின் ஆட்சி மலரும்

 


விரைவில் ராஜபக்சர்களின் ஆட்சி மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (02.07.2023) கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் தொடர்பில் நல்லதொரு மனப்பான்மை காணப்படுகிறது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மகிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாமல் ராஜபக்சாக்களை பழிவாங்குவதிலேயே அவதானம் செலுத்தியது. ராஜபக்சாக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன எனக் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments