"முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான்" என்ற வரிக்கமைய நான் பார்த்த வரையில் ஒரு முயற்சியாளன் உதயமாகி விட்டான்....
ஆம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பயின்று, மட்டக்களப்பு தாலங்குடா கல்வியற் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் துறைக்கு உள்நுழைந்தான் சகோதரன், நண்பன் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்.
அங்கிருந்து கற்று வெளியேறி நரக்கள்ளி தமிழ் வித்தியாலயத்திலும், கண்டல்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் தனது ஆசிரியர் சேவைதனை இன்று வரை வழங்கி வரும் இவர், விளையாட்டுத் துறை சார்ந்து எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டுவரும் இப் பிரதேசத்தில் நான் அறிந்த வகையில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றால் அது மிகையாகாது....
அதற்கமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் நடுவர் தேர்வு -3 பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து தேசிய மெய்வல்லுனர் நடுவர் குழாத்தில் தன் பெயரையும் இணைத்துக் கொண்டார் ஆசிரியர் உமர் ஹத்தாப் முஹம்மது பர்ஹான்....
அதனடிப்படையில் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் கனிஷ்ட அணிகளுக்கான வீரர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இன்று (20) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகின இதில் நடுவராக தனது அறிமுகத்தினை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.... அத்தோடு தேசிய மெய்வல்லுனர் போட்டிகளின் நடுவர்கள் உபயோகிக்கும் "டை" யும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் 100ஆவது வருடப் பூர்த்திக்கு வெளியிடப்பட்ட நினைவு பதக்கமும் இவருக்கு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரால் கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்கள் இலச்சியப் பயணம் சிறக்க வேண்டும் என பிராத்தனை கலந்த வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிப்பதில் நண்பனாய், சகோதரனாய் பெருமிதம் கொள்கிறேன்....
இவன்,
பஹர்தீன் M அரபாத்.
ஊடகவியலாளர் (விளையாட்டுத்துறை)
0 Comments