சலுகைகளுக்காக காத்திருப்பவர்கள் தாமாக முன்னேறுவதுமில்லை, தமது திறமைகளை ஒருபோதும் வளர்த்துக் கொள்வதுமில்லை!
இல்லாமை இயாலாமை என எடுத்ததற்கெல்லாம் நியாயம் கற்பிப்பதில் எதிர்மறையாகவே சாமர்தியத்தை காட்டுவோர் அயோக்கியர்கள்!
நொண்டிச் சாக்குகள் கூறி வஞ்சித்துப் பழக்கப்பட்டவர்கள் வாழ்க்கையும் ஊனமுற்றதாகவே கழியும்!
தகுதி திறமை ஆற்றல் உடைய பலர் இருக்க குறுக்கு வழிகளில் தொழில் பதவி அந்தஸ்த்துக்களை அடைபவர்கள் வாழ்நாள் திருடர்கள்.
அடுத்தவர் திறமை செயல் ஆற்றல்கள் சாதனைகளை தமதாக்கி புள்ளி வாங்குபவர்கள் இலாபமீட்டுபவர்கள் பகற்கொள்ளை காரர்கள்!
தமது இயலாமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடுத்தவர் மீது பலிபோடுபவர்கள் கயவர்கள்!
தனது தவறுகள் பிழைகள் குற்றம் குறைகளால் ஏற்படும் கோப தாபங்களை தாய் தந்தை, கணவன்/மனைவி மக்கள் மீதும் தொழில் செய்யும் இடங்களிலும் காட்டிக் கொண்டு வம்புகளை வளர்ப்பவர்கள் கொடிய கோழைகள் !
சிறிய சிறிய பொய்களை களவுகளை மறைப்பதற்காக பெரிய பெரிய அபாண்டங்களை சொல்லி, பிணக்குகளை தோற்றுவித்து கவனத்தை திசை திருப்பும் வஞ்சகர்கள் இருப்பதிலும் இறப்பது மேல்!
நீதி நியாயத்தின் பக்கம் தலைநிமிர்ந்து நிற்காமல் மெளனமாக ஒதுங்கிச் செல்வோர் கோழைகள், அநீதி அக்கிரமக்கத்தின் பக்கம் சார்ந்து நிற்போர் பாவத்தில் பங்காளர்கள்!
ஒழுக்கம் பண்பாடுகள் சீர்கெட்டுச் சீரழியும் மனிதர்களை மிருகங்கள் என பொதுவாகவோ அல்லது ஏதேனும் ஒரு மிருகத்துடன் குறிப்பாகவோ ஒப்பிடுவது ஒருவகையில் அவற்றிற்கு இழைக்கும் அநீதியாகும், அவர்கள் அவற்றிலும் கேவலமானவர்கள்!
இத்தகைய பண்புகளை கொண்டவர்கள் மத்தியிலும் சகிப்புத் தன்மையுடன் தன்மானமுள்ள மனிதனாக உண்மை நேர்மையுடன் உயர்ந்து நிற்பவன் தான் உண்மையான சாதனை வீரன்.
இறை நம்பிக்கையும் தன்நம்பிக்கையும், வினைத்திறனும் மிகுந்த இனிய நாளாக இந்த நாளும் இனிவரும் எல்லா நாட்களும் அமைய வாழ்த்துக்கள்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
22.02.2023
0 Comments