வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக நம்மவர்கள் படும் கஷ்டத்தினை உணர்ந்து, அவர்கள் பெரிய தொகை பணத்தினை கொடுத்து ஏமாற்றமடையக்கூடாது என்பதற்காக நமது தூய தேசத்திற்கான இயக்கத்தினால் நம்மவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம்.
அதன் முதற்கட்டமாக புத்தளம் மாவட்டத்தில் இருக்கும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த கல்வி தகைமை குறைந்த 26 நபர்களை தெரிவு செய்து, அவர்களை இலவசமாக கட்டார் நாட்டுக்கு கௌரவமான நிலையான தொழில் ஒன்றுக்காக அனுப்புவது சம்பந்தமான அறிமுக நிகழ்வு புத்தளம் நகரில் இருக்கும் Ice Talkல் நடைப்பெற்றது.
இதிலே தூயதேசத்திற்கான இயக்கத்தின் வண்ணாத்திவில்லு, கல்பிட்டி, புத்தளம் பிரதேச சபை மற்றும் புத்தளம் நகர சபை குழுவின் தலைமையில் சுமார் 30 பேர் கலந்துகொண்டார்கள்.
0 Comments