Subscribe Us

header ads

வன்னி மாவட்ட முசலி பிரதேசத்தில் முதல் கட்டமாக 100 வீடுகளை அமைப்பதற்கு சவுதி அரசாங்கம் இணக்கம்


 வீடமைப்பு ராஜாங்க அமைச்சின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் ரில்வான் , சவுதி அரேபியா தூதரக ஆலோசகர் ஈஷா அல்மளிக்கி அவர்களை  (12) கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், மன்னார் மற்றும் புத்தள பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த ரில்வான், தனது பிரதேசத்துக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தன்னால் இயலுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தூதரக ஆலோசகர் இதன்போது இனக்கம் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் அனாதையாக்கப்பட்ட வன்னி மாவட்ட முசலி பிரதேசத்தில் முதல் கட்டமாக 100 வீடுகளை அமைப்பதற்கு உதவி கோரப்பட்டபோது, சவுதி அரசாங்கம் இனக்கம் தெரிவித்து அதனை நிர்மாணித்து தருவதாக கூறினார்.
மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல குறைகளை எடுத்துரைத்த போது தொடர் உதவியாக இதை செய்து தருவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

-Al-Ishra-

Post a Comment

0 Comments