Subscribe Us

header ads

"தன் கையே தனக்குதவி" நூலை வெளியீடு செய்த சகோதரர் நளீம்

 


முதியோர்கள்தான் எம் வரலாறு என நம்புவள் நான். அவர்களைச் சந்திப்பதில் உள்ள பிரியம் வேறு எதிலும் நான் உணர்ந்ததில்லை. அப்படி நேற்று சந்தித்த புத்தளத்தின் பொக்கிஷம்தான் இவர்.1956.08.23 ல் பிறந்த சகோதரர் நளீம் அவர்கள், இரண்டாம் தரம் வரை மட்டுமே கற்றுள்ளார். தனது சுய முயற்சியைக் கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியிலும் தன்னுடைய வறுமையையும் ஒரு பொருட்டாக எண்ணாது, தனது 67 வயதிலும் கூட சொந்தத் திறமைகளை வெளிக்காட்ட படைத்தவனின் துணையைக் கொண்டு "தன் கையே தனக்குதவி" என்று இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் சக்தி தொலைக்கட்சியின் நெஞ்சம் மறப்பதில்லை, அந்நூர் FM, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வெளிச்சம் FM மேலும் பல அரசியல்வாதிகளின் மேடைகளிலும் இவருடைய கவிதைகள் அரங்கேறியுள்ளது. தனது பிள்ளைகள் தொடங்கி பேரப்பிள்ளைகள் வரை இவருடைய ஆக்கங்கள் கோட்ட மட்டத்திலும் மாவட்டத்திலும் கவிதைகள் முதலிடம் பெற்று வருகின்றது.

இவரிடம் நாம் அறியாத தெரியாத பல பண்டைய காலத்து ஆவணம் தொடங்கி பொருட்கள் வரை சேகரித்து அவருடைய அறை ஒரு கண்காட்சிக் கூடம் போல் காட்சிப்படுத்தியுள்ளார். தனக்கென்று ஒரு இலட்சியப் பாதையை வகுத்து வாழ்ந்து வருகின்றார். வாழும் போதே இவ்வாரனவர்களை ஒரு முறையாவது சந்தித்து விடுங்கள். இவர்கள்தான் நம்மூர்களின் நடமாடும் நூலகங்கள்!

Post a Comment

0 Comments