Subscribe Us

header ads

தில்லையூர் பாடசாலையில் நடைபெற்ற பிரியாவிடை மற்றும் பாராட்டி கெளரவிக்கும் பிரமாண்டமான நிகழ்வு -2022

 


கல்பிட்டி தில்லையூர் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் சிறப்பான ஏற்பாட்டில் கல்பிட்டி தில்லையூர் மு.அ.க.வித்தியாலத்தில் ஏழு வருடங்கள் அதிபராக சேவையாற்றிய வரும் 37 வருடங்கள் ஆசிரியர் சேவையில் கடமையாற்றி ஓய்வு பெறும் அதிபர் X.ரெஜினா அவர்களை பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவித்தல் மற்றும் 2021 ஆம் வருடம் தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற மாணவி A.F.அஸ்மா என்ற மாணவி மற்றும் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டி கெளரவித்தல், தில்லையூர் பாடசாலையில் கடமையாற்றி இந்த(2022) வருடம் வேறு பாடசாலைக்கு மாற்றலாகி சென்ற ஆசிரியர் M.S.ஜெஸ்மின் மற்றும் ஆசிரியர் E.நிரஞ்சனி ஆகியோர்களுக்கு பாராட்டி கெளரவித்தல் தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கு தயார் படுத்திய ஆசிரியர்களை பாராட்டி கெளரவித்தல் போன்ற நிகழ்வுகள் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்பிட்டி கோட்டக் கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் S.I.M.பளீல் மற்றும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார்,கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபர் திருமதி சகிலா ஆகியோரும் கெளரவ அதிதிகளாக கல்பிட்டி பெரிய பள்ளி வாசல் தலைவர் S.I.M.சாஜஹான்,தில்லையூர் பள்ளிவாசல் தலைவர் அன்வர் தீன்,கல்பிட்டி மஜ்லிசுல் உலமாவின் செயலாளர் மெளலவி ரிப்கான்,தில்லையூர் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments