Subscribe Us

header ads

மீண்டும் "புத்தளம் மாவட்டப் பெண்களின் சுயதொழில் மற்றும் நல்லிணக்க ஒன்றியத்தின்" கண்காட்சியும் மலிவு விற்பனையும்


 நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக எமது குழுவின் வியாபார நடவடிக்கையை இடை நிறுத்தி இருந்தோம். நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் "புத்தளம் மாவட்டப் பெண்களின் சுயதொழில் மற்றும் நல்லிணக்க ஒன்றியம்" நத்தார் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியும் மலிவு விற்பனையும் புத்தளம் நகர மண்டபத்தில் இம்மாதம் 24ம் 25ம் நடைபெற உள்ளது.

இக்காட்சியில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சுய தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பெண்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். எனவே அவ்விரு தினமும் புத்தளம் வாழ் மக்கள் அனைவரையும் வருகை தந்து உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எங்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தகவலை ஏனையோருடனும் பகிர்ந்து எமக்கு உங்களது ஆதரவை வழங்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
புத்தளம் மாவட்டப் பெண்களின் சுயதொழில் மற்றும் நல்லிணக்க ஒன்றியம்.

Post a Comment

0 Comments