நாட்டில் அவசரகாலச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்பு ஊரடங்கும் அமுலில் இருக்கும் நிலையில் இடம் பெறும் சம்பவங்கள் குறித்து கூடிய அவதானம் தேவை..!
அரசியல்வாதிகளது காப்புறுதிகள் உள்ள அசையும் அசையா சொத்துக்களுக்கு (அவர்களும் குடும்பத்தினரும் வேறு இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில்) இரவோடிரவாக சேதம் ஏற்படுத்தியவர்கள் ஆர்பாட்டக்காரர்களா?
இனம் தெரியாத காடையர்களா?
மக்களது ஆத்திரத்தை தனிக்கும் அரங்கேற்றமா?
நாட்டில் கலவர நிலையை ஏற்படுத்தி பாதுகாப்பு கெடுபிடிகளை தீவிரமாக்கும் அரங்கேற்றங்களா?
முப்படைகளின் தளபதி ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் அடுத்த கட்ட முஸ்தீபுகளுக்கு தயாராகின்றனரா?
என்ற கேள்விகளும் எழுகின்றன...!
அமைதிப் பேரணி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர பொதுமக்கள் அமைதியாக நிதானமாக செயற்படல் வேண்டும், வன்முறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம் கிறிஸ்தவ சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் விழிப்பாக இருத்தல் அவசியம்.
தற்போதைய அரசிற்கெதிரான மக்கள் எழுச்சியை கலவரங்களாக இன மத மோதல்களாக திசை திருப்பி இறுதிக்கட்ட பாய்ச்சலுக்கு சில தரப்புக்கள் முயலலாம்.
மக்கள் எழுச்சி கடந்து வந்த ஒரு மாத காவத்திற்குள் பல்வேறு அரங்கேற்றங்களை நாம் கண்டு வந்தோம், திருப்பங்களாக அடைவுகளாக நினைத்தவை மூலோபாய நகர்வுகள் என்பதனை அறிந்து கொள்ள அதிக நாட்கள் செல்ல வில்லை!
மஸிஹூத்தீன் இனாமுல்லாஹ்
10.05.2022
0 Comments