அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை நீடித்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவளிப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளார். என்றாலும் இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவைப்படுகின்றது.
இன்று பாராளுமன்றம் கூடும்போது, அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதிக்காக அவசரகால சட்ட பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை.
அத்துடன் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும் ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை.
இவர்கள் அல்லாமல் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் இருக்கும் அதிகமான உறுப்பினர்கள் அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்காது என்றே நம்புகின்றேன்.
அத்துடன் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பக்கம் இருந்தாலதும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு நான் இனங்கப்போவதில்லை என்றார்.
0 Comments