சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, பால்மா மற்றும் டின் மீன் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.
விசேட
வர்த்தமானி அறிவித்தல், நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில்
குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை
நீக்குகிறது.
இதன்படி, சீனி, பருப்பு,
பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை,
கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம்
ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
இதனால் சந்தையில் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
0 Comments