Subscribe Us

header ads

தப்பெல்லாம் தப்பேயில்லை To அண்ணாத்தே பாராட்ட பட வேண்டிய நம் கலைஞன் பொத்துவில் அஸ்மின்


சமீபமாக "மெனிக்கே மகே ஹித்தே" என்ற பாடல் வரிகள் என்ன மொழியென்றே அறியாமல் பலரும் உச்சரித்துக் கொண்டிருந்தமை அறிந்த விடயம்.

அப்பாடலை இரசித்து இந்திய ஹிந்திப்பட சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது முகநூல் பக்கம் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதுவரை அமைதியாய் இருந்த ஊடகங்கள் பதிவின் பின்னர் நான் முந்தி நீ முந்தி என்று பாடகி யொஹானியை பாராட்டி எழுதத் தொடங்கினர்.
வாழ்த்துக்கள்

பாராட்டுக்கள் ஒவ்வொரு திறமைகளுக்கும் உந்துதலாக அமையும் இன்னும் உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதனால் பாராட்ட வேண்டும்.

ஆனால் அந்தப்பாராட்டுதலும்
வாழ்த்துக்கள்
கூறலும் இன்று சில இடங்களில் ஊமையாகிப்போனமை (ஈக்கோ) கவலையான விடயம்.

உதாரணமாக பொத்துவில் கவிஞர் அஸ்மின் இன்று தென்னிந்திய தமிழ் படங்கள் சிலவற்றில் பாடல்கள் எழுதியுள்ளார், எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவரின் முதல் பாடலான தப்பெல்லாம் தப்பேயில்லை என்பதில் தொடங்கி இன்று தென்னிந்திய தமிழ் பட சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே படத்துக்கு வரவேற்பு பாடல் எழுதி இவ்வாரம் இந்திய முன்னணி ஊடகங்கள் அவரைப் பாராட்டிக் கொண்டிருக்க இதுவரை இலங்கை ஊடகங்களில் இது பற்றி ஒரு தகவலையும் பகிராமல் இருப்பதன் மர்மம் என்ன?

அடுத்தவர் எழுதும் கவிதையையும் பாடல்களையும் திருடி ஒலி/ஒளி பரப்புச் செய்யும் ஊடகங்கள் இந்த கலைஞனைப் பற்றி பேசாமல் இருப்பதன் காரணம் என்ன.? இதுதான் ஊடகங்களின் ஊக்குவிப்புக்களா...?

-முனாஸ்-

Post a Comment

0 Comments