கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக இலங்கையில் அமுலிலுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைபவங்களில் 150 பேர் பங்கேற்க அனுமதி - பயணக்கட்டுப்பாடும் நீக்கம்!
இதற்கமைவாக 25ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகிய வகையில் புதிய சுகாதார ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் (Dr. Asela Gunawardana) ஆலோசனைக்கு அமைய அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள விதிகளின் கீழ் நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு 25 ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
0 Comments