3 முஸ்லிம் உறுப்பினர்களுடன், ஞானசார தேர்ர் தலைமையில் செயலணி. !
இரண்டு வருட ஆட்சியில் தோல்வி மேல் தோல்வி, எதை எடுத்தாலும் தோல்வி, அரிசி மாபியாவை ஒழிக்க போகிறேன் என்றார், வாங்குவதற்கு அரிசி கூட பற்றாகுறையான ஒரு நிலமை, இருந்த விலையில் இருந்து தினம், தினம் விலை உயர்வு.
கொவிட் காலத்தில், சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலை குறைந்த நேரத்தில், அதற்கு பதிலாக பருப்பில் விலையை குறைத்து மக்களுக்கு சலுகை தருகிறேன் என்றார். பருப்பு இருந்த விலையிலிருந்து அதிகரித்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
இப்படி ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டே போகலாம், மஞ்சள் தட்டுப்பாட்டிலிருந்து, உரத்தட்டுப்பாடு்வரை பல தோல்விகள். ஒவ்வொரு படு தோல்வியின் போதும் “ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகத்த போகிறார்” பெரிய தம்பட்டம் அடித்து ஒரே நாடு ஒரே சட்டத்தை புகுத்தினார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஒன்று மட்டும் தான் இப்பொழுது இவர்களுக்கு உள்ள ஒரே ஒரு “சமாளிப்பு” 69 லட்சம் கூமுட்டைகளை ஒரு பிரச்சினையிலிருத்து திசை, திருப்ப இது தான் கடைசி ஆயுதம்.
இது நடைமுறைக்கு எப்படியும் சாத்தியப்படாது, இதனை நடை முறைப்படுத்த ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.
கடைசி துரும்பை, இரண்டு வருடத்திலேயே போட்டுவிட்டார். இதுவும் தோல்வி தான். ஆனால் கோட்டா யார், ஞானம் சார யார், “ பொது பல சேனா” யார் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ளலாம்.
செயலணியில் இருக்கும் 3 முஸ்லிம்கள் யார், 8ம் தர இஸ்லாம் பாட புத்தகத்தில் வன்முறையை தூண்டும் பாடங்கள் உள்ளது என இரண்டு வருடங்களுக்கு முன் கூறியவர் யார், என இப்பொழுது தெளிவாக விளங்கி கொள்ளலாம். !
இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் “ புரிஞ்சா சரிதான் “ , “தற்போதைய நிலையில் நாடு அமைதியாக இருக்கிறது “ என மெதுவாக கேட்டுக்கொண்டே இருக்கிறது.
-அசீம் ஜவ்பர்-
0 Comments