Subscribe Us

header ads

கோத்தபாயவின் வருகையால் ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் தி ஹெரால்டில் (The Herald) செய்தி

 


போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த முறையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருகிறார் என ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் ஒன்று நேற்று காலை வெளியான தி ஹெரால்டில் (The Herald) பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தி ஹெரால்ட் உலகின் மிக நீண்ட காலமாக இயங்கும் தேசிய பத்திரிகையாகும். உலகின் எட்டாவது பழமையான தினசரி செய்தித் தாளாகவும் இது புகழ்பெற்றுள்ளது. 

  ஸ்கொட்லாந்தில் மிக அதிகளவில் விற்பனையாகும் இந்த பத்திரிகை, இணையத்திலும் செய்திகளை வெளியிடுகிறது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை குறித்து ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கும் வகையில் இப்பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments