Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் உலக சிட்டுக்குருவிகள் நாள் World House Sparrow Day (WHSD)

 


ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும் நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள்ல் 2010 ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவு கூறப்படுகின்றது .
2010ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டு குருவிகளை பாதுகாப்போம்" என்பதாகும்.
♦
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள்
♦
நவீன தகவல் தொழில் நுட்பம் புரட்சி
♦
இயற்கைக்கு மாறாக எடுக்கும் சுற்று சூழல் நடவடிக்கை
போன்ற காரணங்களால் சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த அழிவை 1990களில் முதன் முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள்.
இதற்கு பல காரணங்கள் முன்வைத்தனர்.
1. வெளிக்காற்று வீட்டினுள் வரமுடியாது முழுவதும் குளிரூட்டப்பட்ட வீடுகளில் குருவிகள் கூடு கட்டி குடியிருக்க முடியாமல் போனது.
2. எரிவாயுக்களில் இருந்து வெளியேரும் மெதைன் நைதிரெட் எனும் வேதியல் கழிவு புகையில் காற்று மாசடைந்து குருவிகளை வாழவைக்கும் பூச்சிகள் அழிக்கின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
1. வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
3. அலைபேசிகளில் வருகைக்குப்பின் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைக்கிறது முட்டை விட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.
இதனை முன்னிட்டு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் M. B. M. Rose அவர்களினால் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியராக M. F. M. Thufail (Scouts Assistant District Commissioner - Puttalam) மாணவர்களுக்கு சிட்டுக்குருவி சம்பந்தமான தகவல்களை கூறினார் அத்துடன் தமது வீடுகளிலும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பாடசாலை வளாகத்தினுள் சிட்டுக்குருவிகள் வாழும் சூழலை உருவாக்கும் நோக்கில் குருவி களுக்கான கூடுகளும் மாணவர்களினால் ஆங்காங்கே வைக்கப்பட்டது.
இந்நிகழ்வை சுற்றாடல் கழகத்திற்கு பொறுப்பான A. H. M. M. Shafie ( EPDC - Puttalam) ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தார் அவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்களான M. K. M. Rishad மற்றும் M. F. M. Humayoon அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments