பல வருடகாலமாக காலமாக காணப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மூன்று ஜூம்ஆ பள்ளிகளுக்கிடையிலான ஜனாசா நல்லடக்கம் விடயம் சம்பந்தமாக காணப்பட்டு வந்த இழுபறி நிலைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
(24-03-2021)கல்பிட்டி பெரிய பள்ளியில் இஸாத் தொழுகையின் பின் மூன்று ஜூம்ஆ பள்ளிகலான பெரிய பள்ளி ஜூம்ஆ மஸ்ஜித் ,பஸார் ஜூம்ஆ மஸ்ஜித் ,மஸ்ஜித்துல் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளி ஆகியவற்றில் நிர்வாகத்தினரும் கல்பிட்டி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தினரும் ஒன்று கூடி கொள்கை அளவில் பிரிந்து இருந்தாலும் கலிமா சொன்ன முஸ்லிம்கள் என்ற வகையில் சில விட்டு கொடுப்புகளுடன் மூன்று ஜூம்ஆ பள்ளிக்கும் சொந்தமான மையவாடிகளில் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யவதில் காணப்பட்ட முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லடக்கம் செய்வது என முடிவு எடுத்தனர்.
இனி வரும் காலங்களில் சில விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது எனவும் மேலும் காணப்படும் கொள்கை அளவிலான முரண்பாடுகளையும் பேசித்தீர்த்து கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments