பார்க்க கலர்
கலராய் இருக்கும்
வெளிநாடு!
ஆனால், இதயத்தில்
நிறைவே தெரியாது!
நிறையப்பேருக்கு
ராத்திரியில்
நித்திரையே வாராது!
அள்ள நினைத்து
வருபவர்களும்
அல்லல்தான்
படுகிறார்கள்!
தொல்லைகளைத்
தொலைக்க
வேணுமென்று
வருபவர்களும் பல -
தொல்லைகளோடேதான்
வெளிநாட்டை விட்டு
விடை பெறுகின்றனர்!
வெளிநாடு
வெகு சிலருக்கே
ஒளிமயம்!
பலருக்கு
மாயமாய்
சூழும்
வலி மயம்!!
தாய்நாட்டில்
அரசியல் வாதிகளை
களையெடுத்து
நல்ல பயிர்
நட்டுவிட்டாலே போதும்!
வெளிநாட்டின்
தேவை நமக்கிருக்காது!!
யார் வருவார்..??
இதைச் செய்ய..??
இது நடக்காதவரை,,
குடும்பத்தைத் துறந்து
வலிகளை சுமந்து
வாழும் நிலைதான்!!


தாய்நாட்டில்
கிடைக்கும் காசு
போதுமென்று
நினைத்தால் போதும்!!
எப்போது மாறுமோ..??
இந்த வெளிநாட்டு
மோகம்
விரைவாகத் தீருமோ..??
- தமிழன் களபம் அயூப்
0 Comments